வெள்ளி, 27 மார்ச், 2026

காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்

  தினமலர் : சென்னை;காங்கிரஸ் தொகுதிகள் தேர்வு அனைத்தும் ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத்தன்மை இல்லை என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
காங்கிரஸ் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.


காங்கிரசின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழக காங்கிரசுக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல.

லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: