ஞாயிறு, 18 மே, 2025

ஈழத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சாரகலாம் ? குன்றக்குடி அடிகளாரின் வரலாற்று செய்தி

May be an image of text

ராதா மனோகர் : 4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டில் சகல சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ள முன்மாதிரியை யாழ்ப்பாண சைவ மக்களும் பின்பற்றுவார்களா என்று நல்லூர் ஞானசம்பந்த ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி நாத தம்பிரானிடம் தமிழ்நாடு தெய்வீக பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கேட்டார்.
இத்தகவலை சுவாமிநாத தம்பிரானே தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நாவலர் காலந்தொட்டு வைதீக சைவம் வளர்ச்சீ பெற்று வருவதனால் இத்தகைய நடைமுறைகள் யாழ்ப்பாண மக்கள் ஒருபோதும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்றும் அரசாங்கம் இது விடயத்தில் தலையிட மாட்டாதென்றும் தாம் அவரிடம் கூறியதாகவும் சொன்னார்.


தமிழகத்தில் உள்ள சைவநிலைக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ நிலைக்கும் நிரம்பிய வேறுபாடுகள் இருப்பதனை சுட்டி காட்டி ,
ஈழத்தில் உள்ள சைவ ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளது போல பொதுச்சொத்துக்களாக இல்லாது தனியாருக்கு சொந்தமாக இருப்பதனால் ஆலய பிரவேசம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவிட முடியாத கஷ்ட நிலை இருப்பதாகவும் தான் அடிகளாருக்கு சொன்னதாகவும் கூறினார்
சைவ சமூகத்தில் உள்ள குறைபாடுகளை மடாதிபதிகள் முயற்சிக்கது விட்டால் அவர்களால் சமூகத்திற்கு எவ்வித பலனும் இல்லை என்பதனை தெரிவித்த அடிகளார்,
ஈழத்தில் சைவ மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்ற தமது விருப்பத்தையும் சொல்லி வைத்ததாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எல்லோரும் அரசராக கூடிய திட்டத்தை அடிகளார் ஆதரித்த போதிலும்,
ஏனைய மடாதிபதிகள் அனைவரும் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது இந்த செய்தி
இந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தமிழகத்தை சேர்ந்த திரு  பிரணதார்த்தி ஹரிஹர சர்மா ஆகும்

கருத்துகள் இல்லை: