Annamalai Arulmozhi : ஆளுநர் அதிகாரமும் உயர்நீதிமன்றமும் ..
மனுதாரர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அதனால் பொதுநல வழக்கை மதுரை நீதிமன்றத்தில்தான் பதிவு செய்ய முடியும். மதுரையிலும் விடுமுறைக்கால உயர்நீதிமன்றம் செயல்படுகிறது.
ஆகவே வேறு எந்த வழக்காக இருந்தாலும் மனுதாரர் திருநெல்வேலிக்காரராக இருந்தால் சென்னை உயர்நீதி மன்றப் பதிவு அலுவலகம் வழக்கை பதிவு செய்து வழக்கு எண் கொடுத்திருக்காது .
ஆளுநர் அதிகார வழக்கு மட்டும் எப்படி பதிவு செய்யப்பட்டது?
ஏப்ரல் மாதம் முழுவதும் மனுதாரருக்கு கால
அவகாசம் இருந்தது. அதைப் பயன்படுத்தாமல் ஏன் விடுமுறை நீதிமன்றத்தில் வழக்கு பதிய வேண்டும் ?
மே மாதம் முதல் வாரமே விடுமுறை நீதிமன்றம் செயல்பட்டது. அப்போது வேறு இரண்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தார்கள். அவசர வழக்காக இருந்தால் முதல் வாரமே ஏன் தாக்கல் செய்யவில்லை என்று பதிவாளர் அலுவலகம் ஏன் அவசர வழக்கு கோரிக்கையை நிராகரிக்கவில்லை ?
இரண்டாம் வாரமும் மூன்றாம் வாரமும் வேறு இரண்டு நீதிபதிகள் தொடர்ந்து அமர்வதும் அந்த நேரத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் காப்பாற்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் எதைக் காட்டுகிறது ?
மனுதாரர் தாக்கல் செய்த ஆவணமே போலியானது என்று அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பிறகும் அந்த ஆவணத்தை ஆய்வு கூட செய்யாமல் இடைக்காலத்தடை வழங்க வேண்டிய அவசியம் என்ன ?
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கேட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அதனை அவசர வழக்காக எடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது என்பதை வழக்கறிஞர் தெரிவித்தபிறகும் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டு உத்தரவு போடுவது அரசு வழக்கறிஞருக்கு நடந்த அவமதிப்பா ?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நடந்த அவமதிப்பா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக