மின்னம்பலம் : பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 6 பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்த 50 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உளவாளிகள் பலரும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 6 பாகிஸ்தான் உளவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பஞ்சாப்பில் பிடிபட்ட 6 பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஸ்லீப்பர் செல்கள் என சந்தேகிக்கப்படும் 50 பேர் தற்போது பஞ்சாப் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட பெண் யூடியுபர் ஜோதி மல்ஹோத்ராவுடனும் இவர்களில் சிலர் தொடர்பில் இருந்ததாகவும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக