சனி, 24 மே, 2025

ரஷ்யாவில் கனிமொழி தலைமையிலான குழு.. ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு..

tamil.oneindia.com  -Chandru : பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் எப்படி வீழ்த்தினோம் என்பதை விளக்குவதற்காக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றடைந்து ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்தனர்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பஹல்காம் தீவிரவாத தாக்குத லை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. இதில் முக்கிய தீவிரவாதிகள் பலர் அளிக்கப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் உள்ள அப்பாவி மக்கள் மீது டிரோன் தாக்குதலை நடத்தியது, ஆனால் அதனை இந்திய ராணுவம் நொடிப்பொழுதில் சுக்குநூறாகியது. 4 நாட்கள் கடந்து இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

Kanimozhi

அதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து 33 நாடுகளுக்கு விளக்க அனைத்து கட்சி எம்பி-கள் அடங்கிய குழிவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

Kanimozhi

அதன்படி எம்.பி கனிமொழி தலைமையிலான குழு டெல்லியில் இருந்து புறப்பட்டு ரஷ்யா சென்றடைந்தனர்.

Kanimozhi

ரஷ்யா சென்றடைந்த கனிமொழி தலைமையிலான குழுவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த நிலையில் கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து இந்தியா-பாகிஸ்தான் போர், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத ஆதரவு ஆகியவற்றை குறித்து கலந்துரையாடினர். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: