செவ்வாய், 20 மே, 2025

பொன்முடி வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா? அதிமுகவில் இருந்து வந்தவர்களும், - போய் வந்தவர்களும் வலம் வரும் போது ...

May be an image of 2 people and people smiling

Kalidasan Swaminathan  :  அண்ணன் பொன்முடி வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா?
பொது வெளியில் பேசிய சில சர்ச்சையான கருத்துக்களால்
அவர் துணை செயலாளர் பதவியையும் இழந்து மந்திரி பதவியையும் இழந்தார்.
அமைச்சராக இருப்பவர் எந்த ஜாதியையோ, எந்த மதத்தையோ சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்பதற்காகத்தான் பதவியேற்பின் சத்தியப்பிரமாணம் எடுப்பது.
பொன்முடி அடிப்படை தி.க காரர் என்பதால் சில கருத்துக்கள் அவரை மீறி வந்திருக்கலாம். அதற்கு தான் அமைச்சர் பதவி எடுக்கப்பட்டது.
ஆனால் பொதுச்செயலாளர் பதவி பறிக்கும் அளவுக்கு அவர் செயல் இருந்தது என்றால், கட்சிக்கும் துரோகம்  செய்த பலர் இன்னும் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்களே!
கஞ்சா சங்கருக்கும், ஆட்டுக்குட்டிக்கும்,
ஆமையனுக்கும் பணம் கொடுத்தவர்களும் இன்னும் பதவியில் இருக்கிறார்களே!
அதிமுக வெற்றிக்கு துணை போனவர்களும் கட்சியில் இருக்கிறார்களே!



தவறாக பேசியதற்காக பொன்முடி அவர்கள் மீது நடவடிக்கை என்றால்   இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால் கட்சி தொண்டன் மகிழ்வானே. அதை விடுத்து ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் போது பொன்முடி வீழ்ந்தாரா வீழ்த்தப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது..
பொன்முடி அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு,
அவர் சி.வி.சண்முகம் மீது இணக்கமாக இருந்தார் என்று. கட்சியில் பலர் அதிமுகவுடன் பல ஆண்டுகள் தொடர்பில் தானே இருக்கிறார்கள். அதற்கு பல உதாரணம் இருக்கிறதே...
#அவர் விழுப்புரத்தை விட்டு திருக்கோவிலூர் தொகுதி மாறியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
தலைவர் கலைஞரே,குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை,அண்ணாநகர்,
துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர் என்று தொகுதி மாறி தானே போட்டியிட்டார்.
தலைவர் தளபதியார், ஆயிரம் விளக்கு,குளத்தூர் என்று தொகுதி மாறித்தானே போட்டியிட்டார்,
பேராசிரியர் அன்பழகன் அவர்கள்
புரசைவாக்கம்,பூங்கா நகர், வில்லிவாக்கம்,துறைமுகம் தொகுதிகள் மாறி போட்டியிடத்தான் செய்தார்.
அடுத்து சொல்வது அவர் கட்சியினரை மதிப்பதில்லை என்று.
தமிழ்நாடு முழுவதும் ஒரு சிலரை தவிர யார் தான் கட்சியினரை மதிக்கிறார்கள்.
பொன்முடி அவர்கள் செய்த தவறுக்கு அவருக்கு வாழ்நாள் தண்டனை அதிக பட்சம், அவர் தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்பளித்து கட்சி பதவி மீண்டும் தர தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

/1993இல் வைகோ இந்த இயக்கத்தை விட்டு பிரிந்த போது அன்றைய மாவட்ட செயலாளர் செஞ்சி ராமசந்திரன் வைகோ பின் சென்றார் .
அந்த பொழுதில் கிராமம் கிராமமாக சென்று கலைஞர் இருக்கிறார் வருங்காலம் தளபதி இருக்கிறார் என்று கழக தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கட்சி வளர்த்தவர்//
 //முதல் முதலில் தலைவர் தளபதி தான் நம் இயக்கத்தின் வருங்காலம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர்//
1996 -2001அமைச்சராக இருந்த பொது தமிழகம் முழுவதும் உள்ள கட்சி காரர்களுக்கு பணம் வாங்காமல் 10000சாலை பணியாளர்5000 பஸ் ஓட்டுநர், நடத்துனர் பணிகளை "கழக உறுப்பினர் அட்டை "உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கினார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பல கட்சி கார குடும்பங்கள் பசி இல்லாமல் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து படிக்க வைத்து இருக்கிறார்கள் என்றால் இவர் அன்றைக்கு கட்சி காரனுக்கு ஏற்படுத்திக்கொடுத்த அரசு பணி.
 எத்தனையோ  கிளை செயலாளர் வாரிசுகளுக்கு free MBBS seat வாங்கித்தந்துள்ளார்.
2001 Jayalalithaa ஆட்சியில் அதிகம் பழிவாங்கப்பட்டவர் அதிகம் சிறை சென்றவர் பொன்முடி மட்டுமே. இருந்தும் இந்த இயக்கத்து துரோகம் நினைக்கவில்லை.
2002  கலைஞருக்கு பயணியர் விடுதி மறுக்கப்பட்ட போது தன் தலைவர் கலைஞருக்கு கலைஞர் அறிவாலயம் கட்டி அங்கு அவர் தங்க அனைத்து வசதியும் கொண்ட அறை ஏற்படுத்தி கொடுத்தவர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி என்றல் அது கலைஞர் மற்றும் தளபதி துணையோடு இவர் கொண்டுவந்த திட்டங்களே காரணம் .

2009 தலைவர் தளபதி துணை முதல்வர் ஆக வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் இவரே.
2011 ஜெயலலிதா ஆட்சியிலும் அதிக முறை சிறை சென்றவர் இவரே.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதா வை கச்சத்தீவு பற்றி பேசி ஜெயலலிதா கோவத்தை அதிகம் ஆக்கியவர் அவர் அந்த நேரத்திலும் ஜெயலலிதா வின் பொய் வழக்குக்கு பயப்படவில்லை அதுவே ஜெயா வின் கடைசி சட்டமன்றம் இப்படி எந்த பின்விளைவும் பார்க்காமல் கலைஞர் தளபதி என்று இயக்கத்துக்காக பணியாற்றி இன்று வரை பல வழக்குகளை சந்தித்து வருபவர் .
இளந்தலைவர் உதயநிதி அவர்கள் இளைஞரணி செயலாளர் ஆக முதல் குரல் கொடுத்தவர் இவரே.
 தளபதி தலைமையில் முதல் மாநாடு நடத்தியவர் இவரே.

 இளந்தலைவர் உதயநிதியை வைத்து முதல் கழக நிகழ்ச்சி நடத்தியவர் ரூம் இவரே.
 எக்காலத்திலும் கழகம், கலைஞர் குடும்பம், தலைவர் தளபதி , கழக வருங்காலம்  இளந்தலைவர் உதயநிதி
வாழ்க என்று சொல்லும் முதல் நபர் இவரே கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் துரோகம் எக்காலமும் நினைக்காதவர் பொன்முடி என்னும் கலைஞரின் நன் முத்து பொன்முடி ....

தண்டனை தவறு செய்தவர்களுக்கெல்லாம் என்றால் ஏற்புடையது தான். அது பொன்முடி அவர்களுக்கு மட்டும் என்பது நெஞ்சில் வலிக்கத்தான் செய்கிறது.
அதிமுகவில் இருந்து வந்தவர்களும்,
திமுகவில் இருந்து போய் வந்தவர்களும்
கெத்தாக வலம் வரும் போது திரு.பொன்முடி அவர்களுக்கு மட்டும் தண்டனையா?
- பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்
இது எனது கருத்து ..
ஜெயராமன் திமுக

கருத்துகள் இல்லை: