செவ்வாய், 20 மே, 2025

காதலுக்கு கொலைகளை பரிசளித்த பிரபாகரன் பின்பு தானே காதலித்தான் கல்யாணமும் செய்தான் பிள்ளைகளையும் பெற்றான்

 Suhan Kanagasabai  :  பிரபாகரனின் அதி நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலனாக இருந்த தியாகுவிற்கும்(கந்தையா கிருபாகரன்) முல்லைத்தீவு மாவட்ட நித்திகைக்குளம் 'விடியல்'எனும் பெண்கள் முகாமிலிருந்த யூலியாவிற்கும் இடையிலான காதல் உறவு கண்டறியப்பட்டபின்,
 அவர்கள் இருவருக்கும் மரணதண்டனையே வழங்கப்படவேண்டும் என்று அன்று ஒரே மனதாக ஓங்கிக் குரலெழுப்பிய,
முக்கிய பெண்போராளி ஒருவரின் போருக்குப்பிந்திய வாக்குமூலம் இது):   
”இயக்கத்தின் சுவர்களுக்குள் , எங்கள் கண்கள் குருடாகிக்கிடந்தன; நாம் செய்கின்ற அதர்மக் கொடூரங்களையும் அப்பட்டமான  தவறுகளையும் எங்களால் கண்டுணர முடியவில்லை. இன்று, வெளியில் வந்து நின்று, கண்களைத் திறந்து  பின்னோக்கிப்  பார்க்கும்போது, நாம் விட்ட  பயங்கரமான இமாலயத் தவறுகளின் பிரமாண்டம் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல அக் கொடூரங்களை நிறைவேற்றும்  உடந்தையாளிகளாகவும் இருந்திருக்கின்றோம்.


தியாகு, யூலியா மற்றும் யூலியாவின் கருவில் வளர்ந்த இன்னும் பிறக்காத ஒரு அப்பாவிக்  குழந்தை என்று அவர்களின் மரணங்களை மூர்க்கமாக ஆதரித்தே அன்று குரல் எழுப்பினோம். அந்த மன்னிக்க முடியாத பாவச்செயல்களும் இரத்தக் கறைகளும்,  ஒரு வேட்டைக்குப் புறப்பட்ட பூதம் போல் எங்களுடன் ஒட்டிக்கொண்டு, எமது கல்லறைகளுக்கு நாம் செல்லும் வரை எம்மைத் துரத்துகின்றன.”
மேற்படி வார்த்தைகளைக் கூறியபடி  அந்தப் பெண் பாரிய  விரக்தியில் மூழ்கினாள், ஒரு பலத்த பெருமூச்செறிந்தாள்; அவளதுபெருமூச்சு அவளை அழுத்தும் ஆயிரம் வலிகளின் பாரத்தினைச் சுமந்துகொண்டு வெளியேறியது;  அங்கே கனத்த நீண்ட  மௌனமே எஞ்சி நின்றது.
மூலம்:
Mahathaya's Saga: Power, Paranoia, and Politics in the LTTE  Romance in the Rebel Ranks: Thiyagu and the Female Fighter's Forbidden Love- Part 5 , (Jaffna Monitor, March 2024, Page 27-33)

கருத்துகள் இல்லை: