புதன், 26 ஜனவரி, 2022

021 தமிழ் வளர்ச்சித்துறை விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிப்பு

மின்னம்பலம் : 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை 16 பேருக்கு முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டிற்கான,
1. பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்,
2. மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார் ,
3.பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்,
4. சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்,
5.சிங்கார வேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்,
6.தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
7.அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர் ,

8.சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்,

9.தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்,

10.உமறுப்புலவர் விருது - நா. மம்மது ,

11.கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன்,

12.கம்பர் விருது - பாரதி பாஸ்கர்,

13.ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வன் ,

14.மறைமலையடிகள் விருது - சுகி.சிவம் ,

15.இளங்கோவடிகள் விருது- நெல்லைக் கண்ணன்,

16 அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்

ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: