வெள்ளி, 5 நவம்பர், 2021

நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. இது எல்லாருக்கும் தெரியும்..” - ஜெ., நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மைசூர் பெண்

"I am Jayalalithaa's daughter .. Everyone knows this .." - Mysore girl who came to Jayalalithaa memorial!

நக்கீரன் செய்திப்பிரிவு :  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக 2018 மே 8ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 9.09 ஏக்கரில், 50,422 சதுர அடி பரப்பளவில், சுமார் 79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், கடந்த 27.01.2021 அன்று திறக்கப்படட்டது.


இந்நிலையில் தீபாவளியான நேற்று (04.11.2021) கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். 

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளியான இன்று எங்க அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லாருக்கும் தெரியும்” என்றார். 

மேலும் அவரிடம் செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், “அது சில காரணங்கள் இருக்கு” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்

கருத்துகள் இல்லை: