புதன், 3 நவம்பர், 2021

1927 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த திராவிடன் இதழ் . மற்றும் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை.. மறக்கடிக்கப்பட்ட வரலாறு

1927 ' திராவிடன் ''' யாழ்ப்பாணத்திலிருந்து,,


செல்லபுரம் வள்ளியம்மை :
யாழ்ப்பாணம் சுன்னாகம் என்ற கிராமத்தில் 27 - 11  -1927  "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடம் ஆரம்பிக்கபட்டது
திராவிட வித்தியாசாலை.. சுன்னாகம் யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல் கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906 ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார்.
பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று  1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.
1923 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் .


சம்பந்தர் வித்தியாலயம் திருநாவுக்கரசர் வித்தியாலயம் என்பன சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உருவானவையாகும்.
சைவ வித்தியா விருத்தி பாடசாலைகளில் சைவ சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் . அவை தாழ்த்தப்பட்டமாணவர்களை அனுமதிக்கவில்லை.
 அவர்கள் தொடர்ந்தும் மிஷனரி பாடசாலைகளுக்கே செல்ல முடிந்தது. அத்துடன் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுதலை பெற மதம் மாறி செல்லும் நிலைமையும் இருந்தது.  இந்த நிலையில் அவர்களுக்கு சுயமரியாதையும் கல்வியும் முன்னேற்றமும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர அவசியம் என்று உணரப்பட்டது.
அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் 1926 இல் உருவானது. . அச்சங்கத்தின் ஆரமப தலைவராக திரு மு சி ராசரத்தினம் இருந்தார் . அக்காலத்தில் அவர் சைவ வித்தியா விருத்தி சங்க செயலாளராகவும் இருந்தார்.  
அதே சமயம் சம ஆசனம் . சமபந்தி போசனம். ஆலைய நுழைவு போராட்ட காலங்களுக்கு முன்பிருந்த சாதீய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்தி கொண்டு மு சி ராசரத்தினம் செயல்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும்.
1927 இல் காந்தியார் இலங்கைக்கு வந்த பொழுது வரவேற்பு குழுவில் ராசரத்தினமும் இருந்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் சார்பில் ஆரம்பிக்கப்படட பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 27 - 11  -1927 இல் நடந்தது.
அந்த பாடசாலையின் பெயர் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை"
இப்பாடசாலை கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த இந்து போர்ட் ( சைவ வித்தியா விருத்தி சங்கம்)  எட்டு மாதங்களாகியும்  உறுதி அளித்தபடி நிதி அளிக்கவில்லை என்று 1928  திராவிடன் ஆவணி இதழில் மனவருத்தத்துடன் ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.
 ( 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.)
இந்த பதிவில் இங்கே குறிப்பிட்டிருப்பது சிறு குறிப்பு மட்டுமே .இது பற்றி போதிய வரலாற்று செய்திகள் உள்ளன என்று தெரிகிறது . இது பற்றிய விபரங்கள் தெரிந்தோர் பொதுவெளிக்கு இந்த செய்திகளை கொண்டுவரவேண்டும்  என்று கேட்டு கொள்கிறேன்..
இப்போது புரிகிறதா சிலரின் திராவிட ஒவ்வாமைக்கு உரிய வரலாற்று காரணம்?
இலங்கையில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்றே போர்க்குரல் எழுப்பியது திராவிடம்!  
Thillainathan Kopinath  அவர்களின் தகவல்கள் அடிப்படையில்

 1945 ஆம் ஆண்டிலேயே திராவிட மக்கள் வரலாறு என்ற நூலை மட்டக்களப்பு கல்வியாளர் திரு ஈ எல் தம்பிமுத்து அவர்கள் எழுதிய வரலாற்று செய்தியும் தற்போது கிடைத்திருக்கிறது
Arun Tambimuttu :  எனது பாட்டனார்  E. L. தம்பிமுத்து அவர்கள் 1945ம் ஆண்டில் திராவிட மக்கள் வரலாறு என்ற புத்தகத்தை தமிழிலும்,  Dravida என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் பிரசுரித்திருந்தார்...
...தமிழர்கள் தம் 10,000 வருட வரலாற்றுப்பெருமையை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த புத்தகங்களை அவர் எழுதி இருந்தார்...
...அனைவரும் இலகுவாக  புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எளிதாக எழுதப்பட்ட அந்தப்புத்தகங்கள் இன்றைய தமிழர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது எனது கருத்து...
...வருகின்ற அக்டோபர் 18ம் திகதி, அவரது 115வது பிறந்த தினத்தன்று, தம்பிமுத்து அமையம் அப்புத்தகங்களை மீள் பிரசுரம் செய்ய இருக்கிறது...
- அருண் தம்பிமுத்து

 

 No photo description available.

 

 May be an image of text that says 'திராவிட விட மக்கள் வரலா றI 0'

கருத்துகள் இல்லை: