வெள்ளி, 12 ஜூலை, 2019

இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு எழுதவேண்டும் .. மத்திய அரசின் இந்திவெறி

தினகரன் : இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட தயாநிதி மாறன் கோரிக்கை. புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சலக பணியிடங்களுக்கான தேர்வினை எழுத வேண்டும் என்றும், மாநில மொழிகளில் இனி தேர்வு நடைபெறாது என்கிற மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: