

மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “கேரள மக்களின் துன்பம் எனக்குப் புரிகிறது. இது எதிர்பார்க்கப்படாத ஒரு நெருக்கடி, சேதங்களை மதிப்பீடு செய்வதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால் உடனடி கூடுதல் நிவாரண நிதியாக தற்போது ரூ.100 கோடியை அறிவிக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருவ மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள் எனக் கட்டமைப்பு அனைத்தும் உருக்குலைந்துவிட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து உதவி நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி ரூ. 5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதுபோல, கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் மாற்றித் தரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக