புதன், 11 அக்டோபர், 2017

அமித்ஷா மகன் ஊழலை கண்டுகொள்ளத நிதீஷ்குமார் லாலுவை ஊழல் என்பது ..... சாதிக்கொரு நீதி!

ஆறு ஆண்டுகளுக்கு முன் மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் ஊழல் என்பது பெரிது படுத்தப்பட்டு ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கொண்டு வருவதும், மற்றொரு பக்கம் அது ஒரு விசயமே இல்லையே என்பது போல் பேசுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த அரசியல்வாதிகளின் சாதி. உதாரணமாக லாலு, மாயாவதி போன்றவர்களை மோசமானவர்களாகவும் ஜெயலலிதா, சுரேஷ் கல்மாதி, சுக்ராம் போன்றவர்களை வேறு மாதிரி சித்தரிப்பதற்கும் தொடர்பு இருக்கிறது. பாஜகவை சேர்ந்த பங்காரு லட்சுமணன் ஒரு லட்ச ரூபாய் ஊழலுக்காக தூக்கியெறியப்பட்டார், ஆனால் அதே கட்சியை சேர்ந்த உயர்சாதி திலீப் சிங் பல லட்ச ரூபாய் ஊழல் செய்தபோதும் அவரை கட்சி காப்பாற்றியது என்று சேகர்குப்தா குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய நிலவரத்தை நாம் பார்ப்போம், கோடிக்கணக்கான ரூபாய் ஊழலுக்காக மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட கேதான் தேசாய் குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக மோடி காலத்தில் நியமிக்கப்பட்டார். இப்போது சர்வதேச பொறுப்பில் இருக்கிறார், அதற்கு காரணம் உயர்சாதி பின்புலம். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் ரங்கராஜ் பாண்டே சசிகலா என்றவுடன் ஓங்கி அடிக்கிறார். அதானி தனது நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததை பத்திரிக்கையில் எழுதிய பரஞ்சாய் குஹா தாக்கூர்த்தா EPW பத்திரிக்கையில் இருந்து வெளியேற்றபட்டார். அதானிக்கு 10,000 கோடி லோன் கொடுத்த அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு ஸ்டேட் பேங்க் சேர்மனாக பதவி நீட்டிப்பு கிடைத்தது.

இப்போது அமித்ஷா மகன் ஜெய் ஷா ஊழல் செய்திருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. லாலு ஊழல்வாதி என்பதற்காக பாஜகவோடு இணைந்து அவரை தூக்கி எறிந்த உத்தமர் நீதிஷ் குமாரிடம் அமித்ஷா மகனின் ஊழலை பற்றி நேற்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "நான் இன்று செய்தித்தாள் படிக்கவில்லை, அது பற்றி எனக்குத் தெரியாது, கம்பெனிகளில் முதலீடு செய்வதில் உள்ள நுணுக்கங்கள் தெரியாது." என்று சொல்லியிருக்கிறார்.
Show me the man, i will show you the rule என்று சொல்வார்கள். அதேபோல் Tell me your caste, i will tell you the law and media response என்பது நிஜமான உண்மை!!!!
#தோழர்_BALA_பதிவு

கருத்துகள் இல்லை: