வெள்ளி, 13 அக்டோபர், 2017

கிழக்கு கடற்கரை - 7 பேர் வன்புணர்வு : பவுஞ்சூர் அருகே : மூன்று பேர் கைது

தினமலர் :பவுஞ்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, பவுஞ்சூர் அருகே, இளம் பெண்ணை, ஏழு பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்; நான்கு பேர் தலைமறைவாகி உள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்துள்ள, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்க, ஒதுக்குப் புறமான இடத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த, அப்பகுதியை சேர்ந்த ஏழு பேர், அந்த பெண்ணை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி, விரட்டி அடித்துள்ளனர். பின், ஏழு பேரும், அந்த பெண்ணை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூரம், இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று, அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். உடனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கொடூர குற்றத்தில் ஈடுபட்ட, மூவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றவர்களை, தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிராமப்புறத்தில் நிகழ்ந்த இந்த குற்றத்தால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


வெப்டுனியா :கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண் ஒருவரை 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூருக்கு அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அதை அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த 7 பேர், அப்பெண்ணை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளனர். மேலும், அந்த வாலிபரை தாக்கி, அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு, அப்பெண்ணை 7 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த கொடூரம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற 4 நபர்களையும் அவர்கள் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: