வியாழன், 23 மார்ச், 2017

இரட்டை இலை விசாரணை: 10 அம்சங்கள்

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., தரப்பு விவாதம் தேர்தல் ஆணையத்தில் இன்று(மார்ச் 22) நடந்தது. தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த 10 முக்கிய அம்சங்கள்:
01.
தேர்தல் கமிஷனில் இன்று(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது. இதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர். ஏற்கனவே ஆஜரான ஹாரீஸ் சால்வே ஆஜராகவில்லை.
02.
இந்த விவாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி மட்டுமே விசாரணை நடந்தது. பொது செயலாளர் பற்றி பின்னர் விசாரிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.   கட்சியில் மற்ற தலைவர்களை சுயமாக நடக்க விடாமல் , இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்காமல் . கொள்கை பிடிப்பு இல்லாத கட்சியாக மாறியதில் விளைவு.

03.
காலை 10.30 மணியளவில் துவங்கிய விவாதம் மாலை 5 மணி வரை நடந்தது. முதலில் ஓ.பி.எஸ்., தரப்பினர் விவாதத்தை துவக்கினர். இதற்கு சசிகலா தரப்பினர் பதிலளித்தனர். பின் ஓ.பி.எஸ்., தரப்பினர் விளக்கமளித்தனர்.
04.
ஓ.பி.எஸ்., தரப்பில் தற்காலிக பொது செயலாளர் பதவி என்பதே கிடையாது. மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டது.
05.
ஓ.பி.எஸ்., தரப்பில் மேலும், சசி
அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டத்திற்கு புறம்பானது . இரட்டை இலை சின்னத்தை அளிப்பது, சசிகலாவை பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம். சசிகலாவே போட்டியிட தகுதி இல்லாத போது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும். சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளி. கட்சியின் பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

06.
சசி தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் வாதிடுகையில். 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். பன்னீர் செல்வம் அணியில் 65 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சசிகலா பொது செயலாளராக தொடர சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவும்இல்லை என்றார்.
07.
சசி தரப்பில் மேலும் , எம்.பி.,க்கள், எம்எல்.ஏ.,க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பாலான செயற்குழு பொதுக் குழு ஆதரவு தருகின்றனர். சட்டப்படி சசி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளதால், எங்களுக்கே
Advertisement
இரடடை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். உ.பி.,யில் அகிலேஷ்க்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது போல், எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
08.
ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், இரட்டை இலையை ஒதுக்க மதுசூதனனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எங்களுக்கு சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஓ.பி.எஸ்., ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் கூறுகையில், தற்காலிக பொது செயலாளர் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும் என்றார்.
09.
சசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், தேர்தல் ஆணையம் தனது முடிவை நாளை (மார்ச்23)க்குள் அறிவிக்கும் என்றார்.
10.
அதிமுக வேட்பாளரை அதிமுக ஆட்சி மன்ற குழு தான் தேர்வு செய்தது. இரட்டை இலையை முடக்க கோரிக்கை வைக்கவில்லை என நவநீத கிருஷ்ணன் எம்.பி., கூறினார். தினமலர்

கருத்துகள் இல்லை: