புதன், 13 ஏப்ரல், 2016

காதுல பூ..... அமெரிக்காவில் இந்திய மாணவன் கண்டுபிடித்த மலிவு விலை காது கேட்கும் கருவி....

ஹூஸ்டன்:அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லுாயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு தான், இவரது பூர்வீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாத்தா - பாட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார்.
தாத்தாவுக்கு காது கேட்காத காரணத்தால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவியை பொருத்த வேண்டும் எனக் கூற, கடைக்கு சென்று விசாரித்த போது, அது, விலை அதிகமாகவும், பொருத்துவது சிக்கலானதாகவும் இருந்துள்ளது. ஊர் திரும்பிய அவர், இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். விளைவு, 'கம்ப்யூட்டர் ப்ராசசர்' போன்ற ஒரு உபகரணத்தை கண்டுபிடித்தார். இதன் விலை, வெறும், 4,000 ரூபாய் தான். அதேசமயம், சந்தையில் விற்பனையாகும் கருவிகளின் விலையோ, 66,500 ரூபாய்.இந்த கருவியை, கென்டகி மாகாண அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தார்.சுமார் நான்கு அல்லது ஐந்து டாலர்களுக்கு சீனா தயாரிப்பு  உலக நாடுகளுக்கு எல்லாம் விற்பனையாகிறது . பலர் அவற்றை வாங்கி லேபிளை மாற்றி தங்கள் தயாரிப்பு போன்று அதிக விலைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்கிறார்கள் இந்த அம்பியின் திருவிளையாடலும் அதே ரகமாயிருக்க வாய்ப்புண்டு ..மேலே படத்தில் இருப்பது சீனாக்காரனின் கருவி  விலை நான்கு  டாலர்கள் மட்டுமே.இதில் பல ரகம் பல விலைகளில் உண்டு.
அக்கருவி முதல் பரிசை தட்டிச் சென்றது. இதையடுத்து, மாணவனின் கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, வினியோகிக்க, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன தினமலர்.கம

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்றி நண்பரே நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் நான் எனது அம்மாவிர்க்கு இந்த கருவியை வங்க நினைக்கிறேன் எனக்கு இதை எப்படி வாங்குவது என்று தெரியவில்லை எனக்கு உதவுங்கள்.

Radha manohar சொன்னது…

தற்போது சீனாவில் ஏராளமான காது கேட்கும் கருவி மிகவும் மலிவு விலையில் விற்கிறார்கள் . இந்திய ரூபாயில் சுமார் 500 அளவிலேயே வாங்கலாம்

Unknown சொன்னது…

எனக்கும் தேவைப்படுகிறது