செவ்வாய், 14 ஜூலை, 2015

MSV க்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காத இந்தியா ஒரு நாடா?: ஒய்.ஜி.மகேந்திரன் ஆவேசம்

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு ஒய்.ஜி.மகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், மெல்லிசை மன்னருக்கு இறப்பில்லை. எனக்கு தெரிந்த ஒரே கம்போஸர் எம்.எஸ்.வி மட்டும் தான். சின்ன வயதில் இருந்தே அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். இனிமேல் மெலடி பாடல்களைப் போடுவதற்கு ஆளே கிடையாது.இவர் போட்டுக் கொடுத்த பாதையில் மற்றவர்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன். ஆனால் இன்றைக்கு வெட்கப்படுகிறேன். இந்த மாதிரியான ஒரு மாமேதைக்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காதா இந்தியா ஒரு நாடா? இப்படி ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இவருக்கு கொடுக்காத அந்த விருதுக்கு இனிமேல் மதிப்பே கிடையாது என்றார் dinamani.com 

கருத்துகள் இல்லை: