புதன், 15 ஜூலை, 2015

ஜெயாவை சந்திக்க வைகோ அனுமதி கேட்டு கடிதம் !ஆந்திர 20 தமிழர்கள் சுட்டு படுகொலை விடயம்...

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக ம.தி.மு.க. தலைமையகம் தாயகத் தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தை சார்ந்த ஹென்றி திபேன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர்  நேரம் ஒதுக்கி தரக் கோரி வைகோ கடிதம் எழுதுவதெனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான கடிதத்தை தமிழக முதல்வருக்கு வைகோ  இன்று எழுதியுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ,மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.nakkheeran.in 

கருத்துகள் இல்லை: