புதன், 15 ஜூலை, 2015

காசி ரயில் நிலையம் : 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ......

காசி ரயில் நிலையம் அருகே 4 வயது குழந்தையை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அந்த குழந்தையின் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு நசுக்கிவிட்டுச் சென்ற அவலம் செய்தியை படிப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறாள்.
திங்கட்கிழமை இரவு, அதம்பூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோருடன் காசி ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர், குழந்தையைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து, மிகக் கடினமான பொருளால், குழந்தையின் தலையை நசுக்கி விட்டுச் சென்றுள்ளான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை, பெற்றோர் பார்த்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது கவலைக்கிடமான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறாள்..dinamani.com

கருத்துகள் இல்லை: