ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்குபவர் தான் விபத்தில் பலியான பார்த்தசாரதி. (வட்டமிடப்பட்டுள்ளது)
இந்நிலையில், ஏரோநாட்டிக்கல் படித்து வரும் மாணவர் ஒருவரை, இன்று அதிகாலை 5 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார் பார்த்தசாரதி. வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே வேகத்தடை இருந்துள்ளது. மெதுவாக காரில் வந்த பார்த்தசாரதி, வேகத்தடையை காலை 5.30 மணி அளவில் தாண்டி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வழியாக பார்த்தசாரதி அடிக்கடி வந்துள்ளார். வேகத்தடை இருப்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த சூழ்நிலையில் வேகத்தடையை தாண்டி 20 மீட்டர் தூரத்தில் பார்த்தசாரதி கார் மரத்தில் மோதியதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சகாயம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதை படம் எடுத்து கொடுத்த பார்த்தசாரதி, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சகாயம் குழுவுக்கு கிரானைட் முறைகேடு தொடர்பாக படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சண்.சரவணகுமார்
vikatan.com
இந்நிலையில், ஏரோநாட்டிக்கல் படித்து வரும் மாணவர் ஒருவரை, இன்று அதிகாலை 5 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார் பார்த்தசாரதி. வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே வேகத்தடை இருந்துள்ளது. மெதுவாக காரில் வந்த பார்த்தசாரதி, வேகத்தடையை காலை 5.30 மணி அளவில் தாண்டி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வழியாக பார்த்தசாரதி அடிக்கடி வந்துள்ளார். வேகத்தடை இருப்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த சூழ்நிலையில் வேகத்தடையை தாண்டி 20 மீட்டர் தூரத்தில் பார்த்தசாரதி கார் மரத்தில் மோதியதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சகாயம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதை படம் எடுத்து கொடுத்த பார்த்தசாரதி, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சகாயம் குழுவுக்கு கிரானைட் முறைகேடு தொடர்பாக படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சண்.சரவணகுமார்
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக