சனி, 11 ஏப்ரல், 2015

(தேஜோ மகாலயா) தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு!


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.அந்த மனுவில் அவர்கள், 1212 ஆம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632 ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.  /tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை: