திங்கள், 6 ஏப்ரல், 2015

Chennai :ஆசிரியை மீது பள்ளி முதல்வரே ஆசிட் வீசினார்

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி ஆசிரியை மஞ்சு சிங் என்பவர் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை மஞ்சு சிங் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது அந்த பள்ளியின் முதல்வரே திராவகம் வீசியுள்ளார். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்ற ஆசிரியை மஞ்சு மீது திராவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திராவகம் வீசியதாக பள்ளி முதல்வர் ஃபுளோரா, அவரது மகள் மற்றும் மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியையின் கணவர் பஷீர் அகமது புகாரின் பேரில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவக வீச்சில் காயமடைந்த ஆசிரியை மஞ்சு சிங் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.dinakaran.com

கருத்துகள் இல்லை: