ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட தாலி அணிகிறார்கள் !வானதி சீனிவாசன் பேட்டி!

தி.க. நடத்தவிருக்கும் தாலி அகற்றும் விழாவை தாலி அறுக்கும் போராட்டம் என்று கூறி இந்துப் பெண்களைத் தூண்டி விடுவ துபோல் பாஜகவினர் திசை திருப்புவது சரியா?
வானதி ஸ்ரீநிவாசன் : அப்படி நாங்கள் யாரும் சொல்லலையே சார்… பாஜக தாலி அறு கும் போராட்டம் என்று அதைச் சொல்லவில்லை. அவர்கள் என்ன போராட்டம் நடத்துகிறார்களோ அதற்குத் தான் நாங்கள் மாற்றுக் கருத்தைச் சொல்கிறோம். இந்தப் போராட்டம் தேவையில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.
இஸ்லாத்தில் தாலி கிடையாது. ஆனாலும் தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களும் தாலி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்திற்குள் அவர்களும் வந்து விடுகிறார்கள்.
அப்படியிருக்கும்போது, தி.க.காரர்கள் வந்து அதை நாங்கள் அகற்றுகிறோம்; இது பகுத்தறிவு என்று சொன்னால் எப்படி? தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தாலி அகற்றுவது என்பது ஒட்டு மொத்தமாக எல்லா மதத்தினரையும் புண்படுத்துவது மாதிரிதான் இருக்கிறது.

இன்னொரு விஷயம், எல்லாப் பெண்க ளும் தாலியை அகற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை; எங்கள் இயக்கத்திலுள்ளவர்கள், கொள்கையை ஏற்றுக் கொண்டவர்க ளைத்தான் தாலியை அகற்றச் சொல்கிறோம் என்றுதானே அவ ர்கள் சொல்கிறார் கள்? நான் கேட்கிறேன்… அவர்கள் இயக்கத்திலிருப்பவர்கள்; கொள்கைப் பிடிப்பு இருப்பவர்கள் தாலியே போட வேண்டாமே! அப்புறம் எப்படித் தாலி அகற்றுக்கிற கேள்வி வந்துச்சு?
தாலி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தாலியை எதற்குச் சார் போட வேண்டும்? தாலியே போடாதவர்கள் அப்புறம் எதற்கு அதை அகற்றுவதற்கு ஒரு போராட்டத்தை வைக்க வேண் டும்? தாலி மீது நம்பிக்கை இல்லை என்றால் போகட்டுமே! தாலி போட வேண்டும் என்று யாரும் அவர்களுக்குச் சொல்ல வில்லையே!
ஆனால் தாலியை கல்யாணத் தில் நாங்க அடையாளத்திற்காகப் போடுவோம். அப்புறமா அதை அகற்றுவோம் என்று சொன் னால் அதில் என்ன அர்த்தம் இருக்கு?
இந்தப் போராட்டம் தமிழ் நாட்டில் ஒட்டுமொத்த பெண்களையே காயப்படுத்துகிற மாதிரி யாகத்தான் இருக்கு. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவப் பெண்கள் தாலி அணிகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்று மட்டுமில்லை கிறிஸ்தவர்களின் திருமணத்தில் தாலி என்று சிலுவையையாவது வரைந்து போட் டுக் கொள்கிறார்களா இல்லையா?
ஆக, தாலி அகற்றுவது என்பது எல்லோரையும் இழிவுபடுத் துவதுபோலத்தானே இருக்கிறது! இது பெண்களை இழிவுப டுத்தும் போராட்டம் என்று கூடச் சொல்லலாம்!
நன்றி: மக்கள் ரிப்போர்ட். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: