புதன், 15 ஏப்ரல், 2015

ஒரு வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர்

ஒரு வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜரான, பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஆஜராக கர்நாடக அரசால் நியமிக்கப்படவில்லை. பவானிசிங் ஆஜரானதால் வழக்கின் தன்மையே பாதிக்கப்பட்டுவிட்டது.. நீதிபதி மதன் லோகூர் கண்டனம்! இருப்பினும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையே, ஒரு அனுமதி கடிதத்தை கொடுத்து பவானிசிங்கை ஆஜராக கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் பவானிசிங் ஆஜரானார். எனவே, இந்த நியமனம் செல்லாது என்பது அன்பழகன் தரப்பின் உச்ச நீதிமன்ற வாதமாக இருந்தது. இந்த வழக்கு புதுமையானது. பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக ஆக வேண்டியது. அதாவது, கீழ்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான ஒரு வழக்கறிஞர், வழக்கை நடத்துபவர் சம்மதம் இன்றியே உயர் நீதிமன்றத்திலும், ஆஜராகலாமா, ஆக முடியாதா என்பதை தீர்மானிக்க இந்தியா முழுமைக்குமே, இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக மாறும். எனவே, மிகுந்த கவனத்துடன் வழக்கு விசாரிக்கப்பட்டது.
மதியம், 1 மணிக்கு நீதிபதி மதன் லோகூர் முதலில் தனது தீர்ப்பை வழங்கினார். அதில் பவானிசிங் ஆஜரானது தவறு என்று குறிப்பிட்டார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் மதன் லோகூர் தெரிவித்தார். ஜெயலலிதா இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நீண்ட காலமாக இழுத்தடித்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினர். இந்த தீர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒரு அம்சம் என்னவென்றால், ஹைகோர்ட்டில் பவானிசிங் ஆஜரானதால், வழக்கின் தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் லோகூர். அதாவது, அரசு வழக்கறிஞர், குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டிருந்தால், வழக்கு எப்படி நியாயமாக நடைபெற்றிருக்க முடியும் என்பது, லோகூர் கூற்றின் உட்பொருள். எனவேதான் பவானிசிங் ஆஜராகிய ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாக வேண்டாம், வேறு வழக்கறிஞரை நியமித்து வழக்கை நடத்த வேண்டும் என்று லோகூர் கூறியுள்ளார். ஆனால், நீதிபதி பானுமதியோ, கீழ்மை நீதிமன்றத்தில் ஆஜராக கர்நாடக அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படாததை காரணமாக கூறி, பவானிசிங் ஆஜரானது செல்லும் என்று கூறியுள்ளார். மூன்று நீதிபதிகள் பென்ச் எடுக்கும் முடிவு, வருங்காலத்தில் பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறும் என்பதால், இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: