ஞாயிறு, 18 ஜனவரி, 2015

மேனகா காந்தி : ஜல்லிகட்டை தொடர்ந்து பாஜக எதிர்க்கும்! இறைச்சிக்கு மாடுகளை பாஜக தொடர்ந்து வரவேற்கும்?

அப்படி பா ஜ க சொல்வது உண்மையானால் பா ஜ கவின் அடிப்படை கொள்கையே தவறானதுதானே? மதம் சார்ந்த தீவிரவாதம் எந்த வகையை சேர்த்தி? இந்தியாவில் பா ஜ க அதனை செய்வது ஐ எஸ் ஐ எஸ் போன்ற அமைப்பினை விட சற்று குறைவானதே என்றாலும் அதற்கு நிகரகாதானே இருக்கின்றது. அதனால் பா ஜ கவையே தடை செய்திடலாமோ? இவர்கள் ஆளும் குஜராத் மாநிலம்தான் நம்பர் ஒன்..எதில்? பசுக்களை கொன்று மேலை நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில்? இவர்கள் பசுக்கள் மேல் அக்கறை கொள்பவர்கலாமே? இந்த லட்சணத்தில் உள்ளபோது..மாடுகளை யார் இங்கே சித்திரவதை செய்கின்றார்கள். இது காலம் தோறும் நடைமுறையில் உள்ள ஓர் தனிப்பட்ட இனத்தின் கலாச்சாரம்..ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலாச்சாரம். மேலை நாடுகளில் உள்ளது போல மாட்டின் மீது அம்பை எய்து கொடுமை படுத்துவது போன்றல்ல..இது இளைஞர்களுக்கு ஓர் சவாலான வீரவிளையாட்டு. எல்லையில் கூடத்தான் பாகிஸ்தான் நமது வீரர்களை சுட்டுகொல்கின்றது..தலையை தனியே எடுத்து சென்று பந்து போன்று விளையாடுகின்றது..அதனால் எல்லையில் வீரர்களை திரும்ப பெற்றுகொல்வோமா? உங்களுக்குத்தான் வாயில்லா ஜீவன்கள் மேலே அவ்வளவு பற்று உள்ளதே..அப்புறம் ஏன் இந்த வீரர்கள்? அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளதுதானே? எல்லையோரம் எல்லாம் வெள்ளை கொடியை நட்டுவைத்துவிட்டு உயிர் பலியாவதை தடுக்கலாமே? மேனகா ஏன் இந்திரா காந்தி அவர்களால் ஒதுக்கப்பட்டார் என்பது புரிகின்றது. இந்த ப்ளூ கிராஸ் உறுப்பினர்களின் தொல்லை தாங்கமுடியலையே..வீம்புக்கு பேசுவது இதுதான்..எவராவது மாடுகளை கொல்வார்களே என்றாலோ..அல்லது மாட்டிறைச்சி விற்பதை செய்தாலோ..அவர்களுக்கு இந்த மேனகா என்ன சொல்லப்போகிறார்? பா ஜ கவின் ஒவ்வோர் புள்ளிகளும் சும்மா புகுந்து விளையாடுகின்றார்கள்..ஷ்யூர் அடுத்த ஆட்சி பா ஜ கவசம் கிடையவே கிடையாது..குறைந்த பட்சம் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை கூட இழக்க நேரிடும்..அதற்க்கான அத்தாட்சிதான் மேனகாவின் அதிபுத்திசாலித்தன வியாக்கியானம்.  இவர் தான் நதிநீர் இணைப்பை எதிர்த்தவர். இவர் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிரி
சேகர் சேகரன்
தினமலர்.com

கருத்துகள் இல்லை: