வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஸ்ரீ ரங்கத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பளராக ட்ராபிக் ராமசாமியை ஆதரிக்க வேண்டும்! Traffic Ramasamy is having courage Why not tamils Kalaigner speech

அதிமுகவினரின் சகலவிதமான அத்து மீறல்களையும் தேர்தல் கமிஷனர்களின்  மற்றும்  அதிகாரிகளினதும்  அதிமுக ஜால்ரா அடாவடிகளையும் துணிந்து  கட்சி பேதமில்லாமல்  தோலுரித்து  காட்டக்கூடிய ஒரே வேட்பாளர் இன்றைய தேதியில்  டிராபிக் ராமசாமிதான்!  
பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் டிராபிக்ராமசாமி போட்டி ஸ்ரீரங்க இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த டிராபிக்ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது..... பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போட்டியிடுகிறேன்.தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்கிற உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் தொகுதி எனக்கு அறிமுகமான தொகுதி மட்டும் இல்லாமல் நான் தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான நபர் என்பதாலும் போட்டியிடுகிறேன் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ’’ கைலேஷ் குமார் யாதவ் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து திருச்சியில் நீடிப்பதால் ஸ்ரீரங்கத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும் அவரை 48 மணிநேரத்தில் மாற்ற வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி.பழனிசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்.ஸ்ரீரங்கத்தில் அடிப்படை பிரச்சனையான அடிமனை பிரச்சனை குறித்து மக்களிடம் பேசி அவர்களி்டம் வாக்கு சேகரிப்பேன்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: