புதன், 16 ஜூலை, 2014

Brics வங்கி- 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் சீனாவில் தொடங்கப்படுகிறது! முதல் தலைவராக இந்தியர் !

போர்ட்டலேசா: இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் உலக வங்கியைப் போல 'பிரிக்ஸ்' நாடுகளுக்கான வங்கி தொடங்கப்பட உள்ளது. ‘பிரிக்ஸ்' எனப்படும் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே இந்த உள்ள இதர நாடுகளும் இதே கருத்தை வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஒருவரும் முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷ்யாவும் இடம் பெறுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: