வியாழன், 17 ஜூலை, 2014

லிங்கா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மயங்கி விழுந்தார் !

சென்னை: லிங்கா பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 2 தினங்களுக்கு முன் நடந்தது. எதிரிகளுடன் ரஜினி சண்டை போடுவது போல் காட்சி. இதில் டூப் பயன்படுத்தலாம் என ரவிக்குமார் கூறினார். காரணம், ரிஸ்க்கான காட்சிகளில் சிரத்தை எடுத்து ரஜினி நடிக்க கூடாது என ஏற்கனவே டாக்டர்கள் அவரை எச்சரித்துள்ளனர். இதனால்தான் ரவிக்குமார் அப்படி கூறினார். ஸ்டன்ட் நடிகர்களை காலால் எட்டி உதைப்பது, கொஞ்சம் வேகமாக திரும்பி தாக்குவது போன்ற ஸ்டன்ட்தானே நானே செய்துகொள்கிறேன் என்று ரஜினி சொன்னாராம்.


இதனால் காட்சியை படமாக்க ஆரம்பித்தனர். சண்டை காட்சியில் நடித்துக் கொண்டே இருந்தபோது ரஜினி திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. உடனே அவருக்கு தண்ணீர் தரப்பட்டது. சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு ரஜினி திரும்பினார். ஷூட்டிங் ரத்து செய்யப்பட¢டு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். சோர்வு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.ராணா படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது, வாந்தி எடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டார் ரஜினி. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து திரும்பினார். அப்போதே கடுமையான ஆக்ஷன் காட்சிகளில் நடிக¢க கூடாது என டாக்டர்கள் அவரை அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் ரஜினி மயங்கி விழுந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=59834#sthash.j8o7M44Y.dpuf

கருத்துகள் இல்லை: