செவ்வாய், 1 அக்டோபர், 2013

மம்மூட்டியின் அடாவடி ! திலகனை கவிழ்த்தது போல சுரேஷ் கோபியையும் கவிழ்க்க முயற்சி

சென்னை:மம்மூட்டியிடம் சுரேஷ் கோபி மோதியதால் பரபரப்பு
ஏற்பட்டது.தினா,சமஸ்தானம் படங்களில் நடித்ததுடன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘ஐ படத்திலும் நடித்து வருபவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் கேரளாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுரேஷ் கோபி கலந்துகொண்டார். அப்போது மம்மூட்டியை சரமாரியாக தாக்கி பேசினார். அவரை தாக்கி பேசுவது ஏன் என்று சுரேஷ் கோபியிடம் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார். சமீபகாலமாக இருவருக்கும் மோதல் போக்கு நிலவுவதால் இப்படி தாக்கி பேசியதாக தெரிகிறது.இதுகுறித்து மல்லுவுட் திரையுலகினர் கூறும்போது,‘சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனது. அப்போது மம்மூட்டி, தனது படத்தை வெளியிடுவதற்காக ஏற்கனவே வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த சிறுபட்ஜெட் படமான ‘ஆர்ட்டிஸ்ட் என்ற படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கிவிட்டு தான் நடித்த ‘தெய்வத்தின்டே சுவாதம் கிளிடஸ்‘ படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. இதையறிந்து சுரேஷ் கோபி கோபம் அடைந்தார். அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் மம்மூட்டியை தாக்கி பேட்டி அளித்தார் என்றனர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: