ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஊழல் மருமகன் வதேராவுக்கு எதிராக தகவல் வெளியிட்ட காங்கிரஸ் எம் பிக்கு மேலிடம் நோட்டிஸ் ! விளங்கிடும்

ராபர்ட் வதேரா முறைகேடாக நிலம் வாங்கியதாக தகவல் வெளியிட்ட எம்.பி.,க்கு காங்., மேலிடம் நோட்டீஸ்
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவர்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அரியானா மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை முறைகேடாக வாங்கியதாகவும் குர்கான் தொகுதியின் காங்கிரஸ், எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங் குற்றம் சாட்டி வந்தார்.
மேலும், ராபர்ட் வதேரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இனிமேலும் கட்சியில் நீடிப்பது சரியல்ல என கூறி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ரேவாரி என்ற இடத்தில், பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
இந்தநிலையில், ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு கட்சி தலைமையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உங்களின் ராஜினாமா கடிதம், இன்னமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அக்டோபர், 7ம் தேதிக்குள், ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை என்றால், பொதுக்கூட்டத்தில் நீங்கள் அறிவித்த படி, கட்சியிலிருந்து விலகியதாக கருத நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: