தமிழருவி மணியன்

நாவைச் சுழட்டும் காவிப்பூனை!

ன்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன்.  ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழருவி மணியன்
ஆசிட் அடிப்பது,
மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
என்ற  கலாச்சாரத்தில்,
‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,
ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,
கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,
ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,
திடீரென!
“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
இப்போது இன்னும் ஒரு படி தாவி
காவிப் பயங்கரவாதிகளின்
காலை நக்கவும் தயாராகிவிட்டது.

அடிக்கடி இவர் உதாரணம் காட்டும் கர்ம வீரருக்கே
டெல்லியில் தீ வைத்த ஆர்.எஸ்.எஸ். ‘அகிம்சாவாதிகளின்’ பின்னே போய்
ஊழலற்ற நல்லாட்சி வழங்கப் போகிறாராம் இந்தக் காந்தியக் கல்நெஞ்சன்.
”மோடிதான் நாயகன், மோடிதான் வில்லன், மோடிக்கு போட்டி மோடிதான்”
என்று துக்ளக் சோவை மிஞ்சுமளவுக்கு
தமிழக பார்ப்பனிய ஊடகங்கள் கண்டு கொள்ளுமளவுக்கு
”வருங்கால பிரதமரே வாழ்க! என்று கொடுத்ததுக்கு மேல கூவுது தமிழருவி!
மூடி மறைக்க முடியாத அளவுக்கு
மோடியின் குற்றச்செயல்களும், குஜராத் படுகொலைகளும் நாறிக்கிடப்பதால்
கண்ணை மூடிக்கொண்டு தான் மோடியை ஆதரிக்கவில்லையென்று!
முன் ஜாமின் வேறு!
குஜராத் – அதானி குழுமத்துடனான வரவு செலவில்  படு பயங்கர நிலப்பேர ஊழலும்,
மோடியின் ஆட்சியில்  எஸ்ஸார்,  எல்.அண்ட். டி, போர்டு இந்தியா,  ரிலையன்சு உள்ளிட்ட
பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையில் நடந்துள்ள கொழுத்த ஊழலையும்
இந்தியத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியும்,
இயற்கை எரிவாயு, எண்ணெய் வயல்களின் பங்குகளை விற்பதில்
ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்தின் வழி நடந்த பிரமாண்ட ஊழல் அம்பலமாகியும்,
கண்ணைத் திறந்து கொண்டு ஆதரிக்கும் தமிழருவிக்கு
இது நிர்வாகத் திறமையாகவும், ஊழலற்றதாகவும் காந்தியத் தோலுக்கு உரைக்கிறது போலும்!
ஒரு வேளை மதவெறி போதையில் தமிழருவி தள்ளாடுகிறது போலும்!
சொல்லப்போனால் மதுவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து கூட உண்மைகள் வெளிவந்து விடும்,
மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!
கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
மக்களை வாழவைக்கப் போகிறாராம்!
இதுவும் அவருக்கு ஒரு நம்பிக்கையாம்!
இந்து மதத்தின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான் இதன் உள்ளருத்தம் போலும்!
அதாவது கருணாநிதி, ஜெயாவின் கன்னக் கோலை மோடியின் சூலத்தால் துடைக்கப்போகிறாராம்.
இந்த சந்தடி சாக்கில் மோடியே ஒரு கார்ப்பரேட் கன்னக்கோல் எனும்
முழுப்பூசணிக்காயை பார்ப்பன பிராசாதத்தில் மறைப்பதுதான் தமிழருவியின் தகிடுதத்தம்.
பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளை ஏற்கனவே பிழைப்புவாத அரசியல் வழி
தமிழகத்தில் காலுன்ற வைத்த திராவிடக் குருவிகளுக்கு
இந்த அருவி என்ன மாற்றை முன்மொழிந்து விட்டார்!
கருணாநிதி செய்தால் காரியவாதம்.
வைகோ செய்தால் மாற்று அரசியல்!
இந்தத் தரகு வேலைக்கு தமிழருவிக்கு பார்ப்பன கவரேஜ்!
வீடணர்கள் இல்லாமல் ராமஜெயம் இல்லை
காலந்தோறும் தமிழருவிகள் இல்லாமல் மோடி உலா இல்லை.
கருணாநிதி புடுங்கினால் புல்!
தான் புடுங்கினால் தர்ப்பை என்பதுதான்
தமிழருவியின் மாற்று சிந்தனை யோக்கியதை!
அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட
சமூக விமர்சகர்களாகவும்,
சொற்பொழிவாளர்களாகவும்,
மாற்றுக் கருத்தாளர்களாகவும்
மாய்மாலம் செய்யும் ஊடகப்பிறவிகள்
ஒருவித அரசியல் ஒட்டுண்ணிகள் என்பது மட்டுமல்ல,
அறியப்பட்ட அரசியல் பிழைப்புவாதிகளை விட
இவர்கள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதற்கு
தமிழருவியின் தரகு வேலைகள் நிரூபணங்கள்.
ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களை படுகொலை செய்து
கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தி நரவேட்டையாடியக்
காவிக் கும்பலின் ‘காவிய நாயகன் நரேந்திர மோடியை’
நாட்டைக் காட்டிக் கொடுக்கும்,
இயற்கை வளங்களை சூறையாடும்
கார்ப்பரேட் நிறுவனங்களின்  மூலதன தவத்திற்கு அடியாள் ராமன் வேலை செய்யும்
மோடி எனும் தேச விரோதியை,
தேசத்தின் கதாநாயகனாக சித்தரிக்கும் தமிழருவியின் கரசேவை
பார்ப்பன – பாசிசத்துக்கெதிராக போராடி உயிர்நீத்த
சமூகப் போராளிகளின் சார்பாக கண்டிக்கத்தக்கது.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் போக்கில்
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும்
மறுகாலனிய கொள்கையின் மூலம்
ஊழலும், முறைகேடும், தேசவளங்கள் சூறையாடும் அரசியல் போக்காக
அமலாகிக்கொண்டிருக்கும் முழு உண்மையை
நக்சல்பாரி அரசியல் அமைப்புகள் மட்டும் தான்
மக்களிடம் போராடிச் சொல்கின்றன.
இந்த ‘மாற்று’ அரசியலை தேசத்தின் அமைதிக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும்,
அகிம்சை வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் பாதையே வழி என்றும்,
திராவிடக் கட்சிகள் மட்டும் தான் தீங்கு என்றும்
மடைமாற்றும் ஆளும்வர்க்க கைக்கூலிகளின்
ஒரு அவதாரம் தான்! ‘தமிழருவி’
பிரிட்டிஷ் அடக்குமுறைச் சட்டங்கள், திட்டங்களுக்கு
எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதெல்லாம்,
பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் பாராளுமன்றத்தில் குண்டு வீசி
காலனியாதிக்கத்திடம் கணக்கு தீர்த்த போதெல்லாம்,
காந்தி மடைமாற்றி உண்ணாவிரதம் என்று
நூல் நூற்று நூல் விட்ட மாதிரி
மறுகாலனியாக்கத்திற்கு எதிராக குமுறும் மக்களின் மனநிலையை
மறுபடியும் ஆளும் வர்க்கம் தேர்தல் கோப்பையில் வடித்துக் கொள்ள விழைகிறது.
இதில் இசுலாமிய ரத்தத்தாலும் தலித்துகள் ரத்தத்தாலும்
விவசாயிகள், தொழிலாளிகள் ரத்தத்தாலும்
நிரம்பிய  மோடி எனும் கொலைகார கோப்பையை
தமிழர்களின் கையில் திணிக்க வேலை பார்க்கிறார் தமிழருவி.
கழுத்தில் ஒரு கருப்பு பேண்ட் பிட்டை போட்டுக் கொண்டு
பேச்சில் தமிழன் என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டு
அன்று அத்வானி, வாஜ்பாய் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
காவடி தூக்கிய வைக்கோ தான் தமிழருவி கண்டுபிடித்த தகுந்த முதல்வர்.
நான் பொதுவானவன்  அரசியல் சார்பற்றவன்  நல்லதையே நாடுபவன்
என்று பேசிக்கொண்டே
குறிப்பாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
அல்லக்கை வேலை பார்க்கும் தமிழருவி போன்றவர்கள் தான்
அறியப்பட்ட பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.
- துரை. சண்முகம் vinavu.com