வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஜெகனின் சுனாமி அலை ஆந்திராவை கலக்குகிறது ! காலவரையற்ற உண்ணாவிரதமும் ஆரமபமாம் !

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம்:
ஜெகன்மோகன் ரெட்டி தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மாத காலம் சிறையில் இருந்ததைக் காட்டிலும், இன்றைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் காயமடைந்திருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திராவை மத்திய அரசு பிரிப்பதாகவும், தமது காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் பிறகட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்<

கருத்துகள் இல்லை: