புதன், 2 அக்டோபர், 2013

mike hussey: குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர் கிங்ஸை நடத்தினார் ! சீனியின் லீலைகள் அம்பலம்

குருநாத் மெய்யப்பன் வெறுமனே ஒரு கிரிக்கெட் ஆர்வலர் அவ்வளவுதான்
என்றெல்லாம் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் கூறினாலும் உண்மை வெளிப்படத்தான் செய்கிறது. சென்னை அணிக்கு விளையாடும் மைக் ஹஸ்ஸி தனது புதிய புத்தகத்தில் சூதாட்டப்புகார் சாற்றப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தார் என்று எழுதியுள்ளாரஅண்டர்நீத் தி சதர்ன் க்ராஸ்' ( Underneath the Southern Cross) என்ற அந்த நூலில் மைக் ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளதாவது:எங்கள் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ்தான்! அதன் தலைவர் ஸ்ரீனிவாசன். அவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியப்பொறுப்பிலும் இருந்ததால் குருநாத் மெய்யப்பனிடம் அணியின் அனைத்துப் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. மெய்யப்பனும், பயிற்சியாளர் கெப்ளர் வெசல்சும் இணைந்தே அணியை நடத்தினர். என்று எழுதியுள்ளார் ஹஸ்ஸி.ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 21 பேர்களுடன் குருநாத் மெய்யப்பனும் சூதாட்டம், ஏமாற்றுவேலை, கிரிமினல் குற்றம் உட்பட குற்றப்பன் பெயரும் சார்ஜ் ஷீட்டில் சேர்க்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ரகசிய தகவல்களை வெளிப்படுத்தி அதனியே சூதாட்டத்திற்கும் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு.;<>ஆனால் ஸ்ரீனிவாசன் மெய்யப்பன், 'வெறும் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே' என்று கழண்டு கொண்டார்.

இந்த நிலையில் மைக் ஹஸ்ஸி தனது புத்தகத்தில் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: