வியாழன், 3 அக்டோபர், 2013

ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு ! சொத்துக்குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி முடிகவுடர் !

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முடிகவுடர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வருகிற கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார்.  அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்த நிலையில்,  கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத், எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக தமிழகத்தைச்சார்ந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் முகமது அலி ஐபிஎஸ் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முடிகவுடர் என்பவரை அக்டோபர் 1ம் தேதி முதல் ஜெ.,வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்தார்.  இதன் மூலம்  கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என ஜெ.,வின் கோரிக்கையை நிராகரித்தது.ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதும் இந்த வழக்கு விசார ணைக்கு ஜெ., நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்</

கருத்துகள் இல்லை: