வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இளைய தளபதி விஜய் இப்போ பவ்வியமாக, தலைகுனிந்து அமைச்சர்கள் போல் பேசுகிறார் ! இனி எல்லாம் ஜெயமே


படங்களில் வில்லன்களை புரட்டிப் போட்டு , வீர வசனங்கள் பல பேசி ரசிகர்களின் விசில் சத்தங்களை வாங்கி விலாசம் காட்டிய.. இளைய தளபதி விஜய் இப்போ எப்படி பவ்வியமாக, தலைகுனிந்து பேசுகின்றார் என கொஞ்சம் கண்ணால பாருஙக… ஆனானப்பட்ட உலக நாயகன் எனச்சொல்லிக்கொள்ளும் கமலஹாஸனே.. ‘விஸ்வரூபம்’ படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு அம்மா ஜெயாவின் காலில் வீழ்ந்தவர் என்பது தமிழ் நாட்டுக்கே தெரியும். அவருக்கே அந்த  நிலைன்றால்.. பாவம்! பச்சை பிள்ளை விஜய் அம்மாவை எதிர்க்க முடியுமா? அம்மா யாரு? அம்மாவுக்கு எதிராக நீங்கள் முதல்வராக முடியுமா? ‘தலைவா’ என்று படத்தின் தலைபை வைத்ததற்கு பதிலாக ‘அம்மாவின் தொண்டன் ’ என்ற  தலைப்பை  வைத்திருந்தால்  இப்போ இப்படி  தலைகுனிய  வேண்டி வந்திருக்குமா..? இப்ப…நான் யார் என்று தெரிகிறதா..? நான் யாருக்கு பயமென்று புரிகிறதா..?


கட்டிய கையை ஒருமுறை கூட நகர்த்தவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது. அழுகிறார்… ஆனால் கண்ணீர் தான் வரவில்லை.
 அடுத்த முதல்வர் என்ற கனவை களைந்துவிட்டு, உருப்படியாக நடிப்பார்கள். இல்லையென்றால், முஷ்டியை உயர்த்தி, நான் சொன்னால், தமிழகமே எழுந்து நிக்கும், போராட்டம் வெடிக்கும்,பாசத்தில் புலி, பலத்தில் யானை, மூளையில் எலி என்று நேற்று தோன்றிய சிறு சிறு நடிகர்களும் பஞ்ச் வசனம் பேசமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: