புதன், 14 ஆகஸ்ட், 2013

சு. சுவாமி: நரேந்திர மோடிக்கு துணையாக இருக்கவே BJP யில் சேர்ந்தேன் !

மோடி தலைமையில் மறுமலர்ச்சி ஏற்படவிருக்கிறது : சுப்பிரமணிய சாமி ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி, பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில் அவர்  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ’’பாஜகவும், ஜனதா கட்சியும் ஒத்த கொள்கை உடைய கட்சிகள். நரேந்திரமோடி எனது நெருங்கிய நண்பர். நிர்வாக திறமை கொண்டவர். அவரது தலைமையில் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட உள்ளது. அதற்காக நரேந்திரமோடிக்கு உறுதுணையாக இருக் கவே நான் பாஜகவில் இணைந்தேன்’’என்று தெரிவித்தார்.அவர் மேலும்,  ‘’இந்திய ராணுவம் திறமையானதுதான். பகலில் துப்பாக்கியால் சுடக்கூடாது என ராணுவ வீரர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் ஆட்சியின் அவல நிலை. மத்தியில் புதிய ஆட்சி மலரும் போது இதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: