வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

விஜய் உண்ணாவிரதம் இருக்க போகிறாராம் ! சும்மா பஞ்சு வசனம் பேசியே ஜெயாவை தாஜா பண்ணி பாருங்க பாஸ்

சென்னை: 'தலைவா' படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளியாகாததால் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி மாநகர காவல்துறையிடம் படத்தின் இயக்குநர் மனு அளித்துள்ளார். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் சத்யராஜ், நடிகை அமலா பால் உட்பட படக் குழுவினரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கடந்த 4 வருட முயற்சிக்கு பிறகு விஜய் கால்ஷீட் பெற்று பல கோடி ரூபாய் கடன் வாங்கி ‘தலைவா‘ படத்தைத் தயாரித்திருக்கிறேன். கடந்த 9ம் தேதி படத்தை வெளியிடுவதாக வினியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். படம் வெளி யாவதற்கு 2 நாள் முன்பு, பட த்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர்களுக்கு யாரோ வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதனால் தியேட்டர் அதிபர்கள் பயந்து படத்தை 9ம் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது. இதற்கிடையில் இன்டர்நெட், விசிடிகளில் படம் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இன்றும் படம் வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டத்துக்கு ஆளாவேன். இப்போது நடுரோட்டில் நிற்கிறேன்.

படம் வாங்கிய வினியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகுந்த நஷ்டத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். எனவே முதல்வர் மனமிறங்கி படத்தை இன்று வெளியிட வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு சந்திரபிரகாஷ் ஜெயின் கூறியுள்ளார். பேட்டியின்போது பலமுறை அவர் கண்ணீர் விட்டு அழுதார். உடன் படத்தின் இயக்குனர் விஜய் இருந்தார்.

இந்நிலையில், 'தலைவா' படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளியாகாததால் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: