வியாழன், 15 ஆகஸ்ட், 2013

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ? பயப்படும் தனுஷ்?

சென்னை: ரம்ஜானுக்கு வர வேண்டிய படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் அந்த படத்திற்கு ஆதரவாக பேசிய மாப்பிள்ளை நடிகர் தானாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்புகிறாராம். தளபதியின் லீடர் படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இது குறித்து மாப்பிள்ளை நடிகர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இது போன்று படங்களை தடை செய்வதற்கு செலவழிக்கும் நேரத்தை நாட்டை முன்னேற்ற செலவழித்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்தை படித்த அவரது நலம்விரும்பிகள் பெரிய, பெரிய நடிகர்களே இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக பேச பயந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இது எல்லாம் உங்களுக்கு தேவையா என்று தெரிவித்துள்ளனர். உடனே மாப்பிள்ளை நடிகர் நான் அரசுக்கு எதிரானவனே இல்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு தெரிவித்துவிட்டன என்று பல்டி அடித்துவிட்டார். ஆனால் நலம்விரும்பிகள் கூறியது அவருக்கு இன்னும் பயத்தை அளிக்கிறதாம். அதனால் வீணாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்பித் தள்ளுகிறாராம்.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை: