புதன், 14 ஆகஸ்ட், 2013

ஆர்.எஸ். பாரதி: திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று விஜய் பாடுபட்டார் ! இதுவல்லவோ பரிசு

சென்னை: திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவனுக்கு நடிகர் விஜய்யின் கதி தான் ஏற்படும் என்று அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர், தேமுதிக மற்றும் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சி நேற்று மாலை மறைமலை நகரில் நடந்தது. அவர்கள் அனைவரும் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஸ்டாலின் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்தினார். அப்போது திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று குரல் கொடுத்தவர்கள் இன்றைக்கு எந்த கதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சினிமாக்காரர்கள் ஒன்று திரண்டு நமக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று பாடுபட்டனர். ஆனால் தற்போது அவர்கள் படம் ரிலீஸாக முடியாத அளவுக்கு அல்லல்படுகிறார்கள். திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவனுக்கும் இதே கதி தான் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: