செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

மாட்டினார் உம்மன் சாண்டி ! பேரம்பேசும் சரிதா நாயர் ! பதவி விலக சொல்லும் கேரள மக்கள் !

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட
சரிதா நாயர், ஒரு விழாவில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் மிக நெருக்கமாக காதில் ரகசியம் பேசுவது போல வெளியான புகைப்படம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோலார் பேனல் மோசடி விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி இடது முன்னணி சார்பில் பல்வேறு
போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், சரிதாநாயரை எனக்கு தெரியவே தெரியாது என்றும் முதல்வர் உம்மன் சாண்டி கூறி வந்தார்.
தனக்கு தொடர்பில்லாத ஒரு விவகாரத்தில் தான் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் கூறினார்.இந்நிலையில், கடந்த ஆண்டு கோட்டயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் சரிதாநாயரும் கலந்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்த உம்மன் சாண்டியிடம் சரிதாநாயர் மிக நெருக்கமாக காதில் ரகசியமாக பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகின. இந்த புகைப்படத்தால் உம்மன்சாண்டிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சரிதா நாயரை இதுவரை நான் நேரில் பார்த்ததே இல்லை என்று சட்டசபையில் முதல்வர் உம்மன்சாண்டி பலமுறை கூறியது குறிப்பிடத்

கருத்துகள் இல்லை: