வியாழன், 23 மே, 2013

AVM பாலசுப்ரமணியனின் மகன் குருநாத் மெய்யப்பன் IPL சூதாட்ட புகாரில்

குருநாத் மெய்யப்பன்குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள பிசிசிஐ தலைவர் ஶ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், தமிழ் திரையுலகின் பிரபல ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்தவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்த குருநாத், ஏ.வி.எம். சரவணின் சகோதரரான ஏ.வி.எம். பால சுப்ரமணியனின் மகன்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர்.
இந்நிலையில் அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகன் என்றும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்றும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மெய்யப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் இந்த குருநாத் மெய்யப்பன் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இதனிடையே குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், அதே சமயம் பெரிய தொகையை கட்டி பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதுவும் சட்டவிரோதம்தான் என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. viruvirupu.com

கருத்துகள் இல்லை: