செவ்வாய், 16 அக்டோபர், 2012

P.D.சம்பந்தம் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர்

தமிழ் திரை யில் ஐம்பது அறுபதுகளில் ஒரு நடிகர் இருந்தார்.
'அந்த நாள் ' வீணை பாலசந்தர் இயக்கிய பாடலே இல்லாமல் 1954 ல் வந்த சஸ்பென்ஸ் படம் . அதில் அவர் கொஞ்சம் ஓரளவு தெரியக்கூடிய பாத்திரத்தில் நடித்திருப்பார்.
அவர் P.D .சம்பந்தம் என்ற பெயருடையவர் .ரொம்ப குள்ளமான உருவம். மற்றபடி ரொம்ப சிறிய கதா பாத்திரம். எக்ஸ்ட்ரா என்று சொல்லும்படியாகவே படத்தில் தலை காட்டுவார்.
' ஆடி பெருக்கு' அறுபதுகளின் துவக்கம். ஜெமினி , சரோஜா தேவி நடித்த இந்த படத்தில் சந்திர பாபு பெண் வேடமிட்டு வரும்போது அவரை சைட் அடிப்பார்.
'அதே கண்கள் 'படத்தில் பெண் வேடமிட்டு வரும் நாகேஷை விரட்டி,விரட்டி சைட் நொறுக்குவார்.
நாகேஷ் ' ஆழாக்கு மாதிரி இருக்கிறான். அலையிறான்! ' என்று சலித்துபோவார்.
குமுதம் படத்தில் M . R . ராதா இவரை அவமானப்படுத்தும் போது சம்பந்தம் பரிதாபமாக ' டே நான் உங்கப்பாடா ' என்பார்.


P . D .சம்பந்தம் எப்போதுமே  மிகவும் ஈனமான பாத்திரங்களில் தான் வருவார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில், அதற்கு முன் திருவிளையாடலில் கூஜாவாக நடிப்பார். ஓடுங்கடா என்றால் பதறி ஓடும் குள்ளர்களில் ஒருவராக நடிப்பார்.
லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில்' யாரடா மனிதன் இங்கே 'பாட்டில் சிவாஜி
 ' மனிதரில் நாய்கள் உண்டு ' என்று பாடும்போது காமெரா இவர் மீது தான் Focus ஆகும்.
உண்மையில் இவர் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர். எல்லா நடிகர்களுக்கும் இவர் தான் வாத்தியார். ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பது , நாற்பது, ஐம்பது, அறுபதுகளில்திரையில் பிரபலமான பல நடிகர்களுக்கும் நாடக உலகில் இவர் தான் வாத்தியார்! இவ்வளவு ஏன் கலைவாணர் N. S. கிருஷ்ணன் இவரிடம் காலை தொட்டு வணங்குவார். ஏனென்றால் நாடக உலகில் அவருக்கே இந்த சம்பந்தம் ஆசிரியர். ரொம்ப கண்டிப்பானவர்.கட்டுப்பாடு விஷயத்தில் கறாரானவர். கையில் பிரம்பு வைத்திருப்பார். அவரிடம் அடி வாங்காத பிரபலங்களே கிடையாது.

திரையில் பிரபலமான பெரிய நடிகர்களுக்கு அவர்களின் பால்ய காலத்தில் துவங்கி வாலிப காலம் வரை நடிப்பு சொல்லி கொடுத்த ஒரு Commanding Personality தன் முதிய வயதில் திரையில் மிக அல்ப கதாபாத்திரங்களில் நடித்தார் என்பது சினிமா என்னும் மாய உலகம் கண்ட,காட்டிய அபத்தங்களின் உச்சம்.

கருத்துகள் இல்லை: