சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு விவகாரத்து வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளது. இதை அதிகபடுத்த வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் விசாரித்து, ‘‘குடும்பநல நீதிமன்றம் விவகா ரத்து வழங்கியது சரியானதுதான். அது செல்லும். அதை ரத்து செய்ய முடியாது.
இதுதவிர மனுதாருக்கு சீனிவாஸ் ஏற்கனவே ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்கியது போதாது. எனவே மேலும் ரூ.10 லட்சம் ஜீவனாம்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மகனுக்கு தற்போது 16 வயதாகியுள்ளது. இந்த தொகையில் ரூ.5 லட்சம் மகனுக்கு கொடுக்க உத்தரவிடுகிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக