சனி, 7 மே, 2011

Osama உயிருடன் பிடிபட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டார்

அமெரிக்க படைகளால் அப்டோபாத் வளாகத்தில் தாக்குதல் நடத்த தொடங்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில், ஒசாமா உயிரோடு பிடிபட்டு விட்டதாகவும், பின்னரே அவர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் ஒசாமாவின் மகள் தெரிவித்துள்ளதாக பாகிஸ்த்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் அரபியா செய்தி சேவைக்கு பாகிஸ்த்தான் படையினர் கூறுகையில்.
குறித்த தாக்குதல் நடைபெற்ற போது, ஒசாமவின் குடும்பத்தினர் என நம்பப்படும், 2 பெண்களும், 2 ௧2 வயதுக்குட்பட்ட 6 சிறார்களும் பிடிபட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் ராவல் பிண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரான பின் லாடனின் 12 வயது மகளே, பின் லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட செய்தியை எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார். ஒசாமாவை உயிரோடு பிடிக்க முயன்றும் குடும்பத்தினரின் கண்ணெதிரேயே அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றதாக அவர் கூறியுள்ளார். என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: