புதன், 4 மே, 2011

அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம்.கனிமொழி விவகாரம் தொட

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற போது , மதுரையில் இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வாக்கு பதிவு பின்னர் சென்னையில் முகாமிட்டிருந்தார். டெல்லி பக்கம் அவர் சென்று வெகு நாட்களாகி விட்டது.

தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக அவர் சென்றிருந்தார். அங்கிருந்தபடி தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, அங்கிருந்து காலை 10 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கனிமொழி விவகாரம் தொடர்பாகவே அழகிரி டெல்லிக்குப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
English summary
Union Minister and DMK strong man M.K.Azhagiri has left for Delhi this morning. He was camping in Kodaikanal. This morning he left for Madurai and then to Delhi.

கருத்துகள் இல்லை: