புதன், 4 மே, 2011

கோவில்களும் ஒலிபெருக்கிகளும்

யாழ்பாணத்தில் உள்ள கோவில்களில் ஏனோ தெரியவில்லை ஒலிபெருகிகளை கண்மண் தெரியாமல் அலற விடுகிறார்கள் ?
பலரும் பலவிதமான காரணங்களை கூறுகிறார்கள். கோவில்கள் பெருதும் வியாபார ஸ்தலங்களாக மாறிவிட்ட சூழ்நிலையில் விளம்பரம் தேவையாக இருப்பதில் வியப்பில்லைதான். ஒலிபெருகிகள் ஒரு மலிவான விளம்பர சாதனமாகும். வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் உண்டுதானே. 
இவர்களின் ஒலிபெருக்கி அலறல்கள் பொதுமக்களுக்கு எவ்வளவு மோசமான தொந்தரவை கொடுக்கின்றன என்பதை பற்றி   இந்த கோவில்காரர்கள் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும். நொய்ஸ் பொலிஷன் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சகிக்க முடியாத சப்த கொடுமையை இவர்கள் நிறுத்தினாலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் காசும் தருவார்கள். 
மாறாக மக்களின் மனதை சற்றும் புரிது கொள்ளாமல் ஒலிபெருகிகளை உச்ச தொனியில் அலற விடுவோம் என்று தீர்மானித்தால் என்ன செய்வது?
இவர்களின் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள்தான் இவர்களுக்கு மனிதாபிமானத்தை கற்று தரவேண்டும். 
நல்லூரில் மட்டும் ஒலிபெருக்கிகள் பாவிக்கப்படுவதில்லை

கருத்துகள் இல்லை: