ஞாயிறு, 1 மே, 2011

இலங்கை அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரம்

இலங்கை அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 27 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் 40 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுள்ளனர். தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடித்து தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வைக்கக்கோரி கடந்த புதன்கிழமை 17 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் ஏதும் இல்லாத நிலையில் கடந்த வியாழக்கிழமை மேலும் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 27 இலங்கை அகதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை: