வியாழன், 4 அக்டோபர், 2018

பேராசிரியர் மீரா ஆஷா மேனன் உடல் அவரது வீட்டில் ... அண்ணா பல்கலை ,, முன்னாள் பேராசிரியர்

தினகரன் : சென்னை: அடையாறு இந்திரா நகரில் கணவர் இறந்ததால் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்த அண்ணா பல்கலை பெண் பேராசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு, இந்திரா நகர் 4வது அவென்யூவை சேர்ந்தவர் மீரா ஆஷாமேனன் (56). அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர். இவரது கணவர் வின்சென்ட் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.  கடந்த 2014ம் ஆண்டு முதல் பணிக்கு செல்லாமல் மீரா ஆஷாமேனன் வீட்டில் தனியாக இருந்ததால் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக, மீரா ஆஷாமேனன் பணிக்கு வராததால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அவரது வீட்டுக்கு ஆள் அனுப்பி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சிலர் அங்கு சென்றபோது, ‘‘நான் எவரையும் பார்க்க விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழம்பியபடி திரும்பி சென்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீரா ஆஷாமேனன் தன்னுடைய வீட்டின் எதிரே இஸ்திரி கடை நடத்தும் வரதன் என்பவரிடம், ‘‘பணம் இல்லை. பிறகு தருகின்றேன். டிபன் வாங்கி கொடு’’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மன்னார் 150 எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வு பணிகள் தொடர்கின்றன ...

வெப்துனியா :இலங்கையில் ஒரே இடத்தில் 150 எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக குழியை தோண்டிய போது அதில் குவியலாக பிணங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் வேரெங்கும் பிணக்குவியல் இருக்கிறதா? என்பதை அறிய பல இடங்களில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது. skeleton இந்நிலையில் நேற்று ஒரு இடத்தில் குழி தோண்டியபோது 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது இலங்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
IBCTAMIL.com : மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள்அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை - தீர்ப்பை மறுஆய்வு செய்ய நாயர் ஜாதி மனுத்தாக்கல்

சபரிமலை விவகாரம் - தீர்ப்பை மறுஆய்வு செய்ய நாயர் சேவை சமூகம் மனுத்தாக்கல்
மாலைமலர் : சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள நாயர் சேவை சமூகம் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதி இருந்தது. இந்த முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் 28-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு பலதரப்பிலும் வரவேற்பை பெற்றபோதும், சில இந்து அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தன.

அருப்புகோட்டை அருகே . கலவரம் தேவர் - நாயக்கர் ஜாதி கலவரம் .. வேடிக்கை பார்க்கும் போலீஸ்! விடியோ


செந்தூர் பாண்டியன் : இது என்ன கால கொடுமை காவல்துறை நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறது.???
தமிழ் நாட்டில் நியாயம் பேசும் பொதுவுடைமை அரசியல் வாதிகளே எங்கே போனது உங்கள் பொதுவுடைமை சித்தந்தம்.???
நியாயத்தின் பக்கம் எப்போதும் நிற்போம் என்று சொல்லும் "பேனா முனை" போராளிகள் பத்திரிகை & ஊடகவியாளர்களே நீங்கள் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள்.???
அருப்புக்கோட்டை அருகே தொப்பலாகரை என்ற
கிராமத்தில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலில் உரிமை கேட்டு "நாயக்கர் சமூகத்தினர்" ஊருக்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் அங்கு உள்ளவர்களை பயங்கர ஆயுதங்களால் வட்டி "ரத்த வெள்ளத்தில்" சாய்த்து விட்டு அங்கிருந்த "பச்சிளம் குழந்தைகளையும்" கொடூரமாக தாக்கியதுடன் அங்குள்ள வீடுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து நாசக்காடாக்கி மிகப்பெரிய கொடுஞ்செயலை செய்திருக்கிறார் இத்தனையையும் காவல்துறையினர் கண்முன்னே அவர்களுடைய முழுமையான ஒத்துழைப்புடன் என்பதை இந்த கானொளியை பார்க்கும்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இதில் வெட்டுபட்டு படுகாயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள் இது என்ன காலக்கொடுமை

புதன், 3 அக்டோபர், 2018

கருணாஸ் முழக்கத்தின் பின்னணியில் திமுகவா?

ஜெ.அன்பழகன் குடியரசு தலைவர் ஆதரவு உள்ளது tamil.oneindia.com - veerakumaran. ;சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக எம்எல்ஏ கருணாஸ் புரட்சி குரல் எழுப்பியதன் பின்னணியில் திமுக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ்.
ஆனால் சமீப காலமாகவே, அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற பிற சிறு கட்சி பிரமுகர்களான தமிமுன் அன்சாரி, தனியரசு போலவே கருணாஸும், எடப்பாடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முதல்வரே நான் அடிப்பேன் என அஞ்சுகிறார் என்று கருணாஸ் பேசிய பேச்சு, அரசை உசுப்பேற்றிவிட்டது. இதையடுத்து கருணாஸ் கைது செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டியில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கும் அவர் மீது பாய்ந்தது. தற்போது கருணாஸ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நீதிபதி : மக்கள் போராடினால் ஆலையை மூடுவதா? .. ஸ்டெர்லைட் நீதிபதியின் வேதாந்தா பாசம்

மின்னம்பலம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் இரண்டாவது அலகுக்காக 342 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுக்குக் குத்தகைக்குப் பெற்று சிப்காட்டுடன் உடன்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான பணத்தையும் சிப்காட்டுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மாறன் - விஜய் கூட்டணி, கோபத்தில் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: மாறன் - விஜய் கூட்டணி, கோபத்தில் ஸ்டாலின் மின்னம்பலம்:  “ஊரெல்லாம் சர்கார் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. அதுவும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். நேற்று தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுதான் அதற்கு காரணம்.
சர்கார் ஆடியோ விழாவில் விஜயை மேடையேற்றும்போதே, தளபதி, தளபதி, தளபதி என அரங்கம் முழுதையும் கோஷம்போட வைத்தார் தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா. இது எதேச்சையா நடந்ததில்லையாம். விஜய், கலாநிதி மாறன் சேர்ந்து போட்ட ப்ளான்படிதான் விஜயை தளபதி என்ற பெயரிலேயே ஃபுல் ப்ரமோஷன் செய்கிறார்களாம்.
விழாவில் பேசிய விஜய், ‘எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்துதான் ஆக வேண்டும். இந்த இடத்தில் நான் ஒரு குட்டிக் கதை சொல்றேன்.

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு


இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு
_103682114_03dfe31e-e477-419a-a5e9-e9d44d8521dd இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு 103682114 03dfe31e e477 419a a5e9 e9d44d8521dd BBC :இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் விஜயகாந்த் 17 வயதான விஜயகாந்த்  என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.
கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார். 19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

மாறன் சகோதரர்கள் .. பாஜகவின் சிலிப்பர் செல்கள்... தொடரும் சதிகள் ...

ஆலஞ்சியார் : இவர் தான் திரையுலகின் தளபதி , தளபதி தளபதி ..அடுத்த
மிகப்பெரிய கட்டத்திற்கு வரவேண்டும் ...ரஜினி சார் வந்துவிட்டார் .. கலாநிதி மாறன் ..
அவர் சொல்ல வந்தது நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார் .. மாறன் சகோதரர்கள் வியாபாரிகள் அவர்களின் சொத்தை வளத்தை பெருக்கிக் கொள்ள ,பாதுகாக்க அவர்களுக்கு அரசியல் தேவைபடுகிறது அதற்கு அப்பன் இருந்த கட்சி துணை நிற்குமென நம்புகிறார்கள் .. எப்போது எதிரியை கூட சில நேரம் நம்பிவிடலாம் ஆனால் கூட இருந்த குழிப்பறிப்போரை நம்ப முடியாது ..
..
2ஜி வழக்கு ..  தன் சகோதரனை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்தவுடன் .. திரு.ஆண்டிமுத்து ராசா அந்த பதவியை ஏற்றதும் வன்மம் கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டம் .. தொடர்ந்து 2ஜியை தினம் தினம் செய்தியாக்கி மக்களிடத்தில் ராசாவின் பெயரை கெடுக்கவேண்டுமென்பதற்காக .. சாதாரணமான ஒருவன் ஒடுக்கபட்டவன் உயர்பதவியை அது தமக்கு தரப்பட்ட பதவியை அலங்கரிப்பதா என்று காழ்ப்புணர்ச்சியோடு இவர்கள் செய்த பிரச்சாரம் .. சன்டிவி எனும் செய்தி ஊடகத்தை பயன்படுத்தி இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.. அதையெல்லாம்,கலைஞர் பொறுத்தது முரசொலி மாறனுக்காகவே தவிர வேறில்லை ..
அடுத்து யார் என தினகரனில் ஸ்டாலினா அழகிரி என பட்டியலிட்டு .. அது மதுரை தினகரன் அலுவலக எரிப்பும் கொலையுமாக திமுகவிற்கு கலங்கத்தை கொண்டு சேர்த்தது
அதற்கு பிறகும் கலைஞர் மன்னித்து இவர்களை அருகில் வைத்திருந்தார் ..

ப.ரஞ்சித்தும் சீமானும் ஒண்ணா ? இருவரும் அக்ரஹார வழி சிந்திப்பவர்களா?

LR Jagadheesan : சீமான் ரசிகர்களுக்கும் பா ரஞ்சித் ரசிகர்களுக்கும் பெரிய
வித்தியாசமில்லை. முதல்ரகம் இனவெறியை ஆதரிக்கிறார்கள். இரண்டாவது ரகம் ஜாதித்தூய்மையை வழிபடுகிறார்கள்.
இருதரப்பாரும் எந்நேரமும் அடுத்தவருக்கு மரபணுச்சோதனை நடத்தி “இவாள்ளாம் நம்மவா, அவாள்ளாம் வேத்து மனுஷா” என அக்ரஹார ரகத்தீர்ப்பெழுதுவதிலேயே ஆயுளை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முரண்படுபவர்கள், விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை “வந்தேறிகள்” என்று வாஞ்சையோடு அழைத்தால் அது சீமான் ரசிகர்கள். “சவர்ணாக்கள், சூத்திர ஆண்டைகள்” என்றழைத்தால் அது ரஞ்சித் ரசிகர்கள்.
ஒரே வித்தியாசம் சீமானின் ரசிகர்பட்டாளத்தில் மென்பொருள் மேதைகள் அதிகம். ரஞ்சித் ரசிகர்களில் பலர் பேராசிரியப் பெருந்தகைகள்.
இந்த இருதரப்பாரும் ஓயாது பாடுபட்டு உருவாக்க விரும்பும் “உன்னத பொன்னுலகில்” இவர்களால் “அந்நியர்” எனப்படுவோருக்கு என்ன இடம் இருக்கும் என்பதை இருதரப்பாரும் மறைக்காமல் இப்போதே சொல்வது இருதரப்பாரின் தனிச்சிறப்பு.
ஆனால் இருதரப்பாருமே “வாருங்கள் உரையாடுவோம்” என்று எதிர்தரப்புக்கு அழைப்பு விட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் ... சீமான் , குமரி அனந்தன், விவேகானந்தர் இல்லம் .. இன்னும் பல

LR Jagadheesan : இந்த செய்தியைப்பார்த்ததும் இதே போன்ற வேறு இரண்டு
செய்திகள் நினைவுக்கு வருகின்றன.
முதலாவது பாஜக தமிழ்நாட்டு தலைவி தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையார் குமரி அனந்தன் தனிக்கட்சி நடத்தியபோது அதற்காக தியாகராயநகரில் வெங்கட்நாராயணா சாலையை ஒட்டிய தனிப்பெரும் வீட்டை வாடகைக்கு எடுத்தார். பின் சீமானைப்போலவே அவரும் காலி செய்ய மறுத்தார். வீட்டின் முதலாளி தட்டாத கதவில்லை. முறையிடாத அதிகாரமில்லை. குமரி அனந்தனின் அரசியல் செல்வாக்கும் ஜாதிச்சங்கத்தொடர்புகளும் அவருக்கு பாதுகாப்பாகவும் வீட்டு உரிமையாளருக்கு எதிராகவும் இருந்தன. அதன் இறுதி முடிவு என்ன என்பது தெரியாது.
இரண்டாவது கடற்கரையை ஒட்டிய விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ணமடம் கைப்பற்றிக்கொண்ட நிகழ்வு. தமிழக அரசுக்கு சொந்தமான விவேகாநந்தர் இல்லத்தை பராமரிக்கிறோம் என்று நைச்சியமாக உள்ளே நுழைந்த ராமகிருஷ்ண மடம், பின்னர் அந்த இல்லத்தில் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைக்க தமிழக அரசு நினைத்தபோது தமிழக அரசிடம் தர மறுத்தது. அரசுக்கு சொந்தமான இடத்தை அரசே நினைத்தாலும் திரும்ப எடுக்க முடியாமல் போனது.
காரணம் தமிழ்நாட்டு ஊடகங்களில் ஊடுருவியிருக்கும் ஒற்றை ஜாதியைச்சேர்ந்த மடத்தின் ஆதரவாளர்கள் தங்களின் சுயஜாதிப்பாசத்தை அன்றைய முதல்வர் கலைஞருக்கு எதிராகத்திருப்பி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதினார்கள். அரசாங்க கட்டிடத்தை மடம் ஆக்கிரமிக்கப்பார்க்கிறது என்கிற அடிப்படையை எழுத மறுத்தார்கள்.

ம.பி. ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் மாயாவதி காங்கிரஸ் கூட்டணி இல்லை. .. மத்தியில் கூட்டணி தொடரும் ?

Bahujan Samaj Party Chief Mayawati announced to go solo in the upcoming Rajasthan and Madhya Pradesh state polls this year. However, maintained suspense over an alliance for the 2019 Lok Sabha polls, with Congress
யூ-டர்ன் அடித்த  பிஎஸ்பி தலைவர் மாயாவதி - காங்கிரசுடன் கூட்டணி இல்லை
zeenews tamil :இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,
"மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தனியாக போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுல் மற்றும் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்னர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங் போன்றோர் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்பை பார்த்து பயப்படுகின்றனர்.
பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்படும் திக்விஜய் சிங், மத்திய அரசிடமிருந்து மாயாவதிக்கு தொடர்ந்து அதிக நெருக்கடி வந்தவண்ணம் உள்ளது. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி தேவை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது ஆதாரமற்றது.

கமலஹாசன் : அதிமுக அரசு செயல்படவில்லை ...தமிழகத்தில் பாஜக அரசுதான் செயல்படுகிறதோ?

தினகரன் :சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சி செயல்படாத ஆட்சியாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல்ஹாசன் கூறினார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். தொடர்ந்து கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறியதாவது: 25 வருடங்களாக கிராமசபை கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. இங்கு நடக்கும் கிராம சபை கூட்டத்தை எங்கள் கட்சி சார்பில் பார்வையிட வந்தேன். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் வாசிப்பதோடு மட்டுமின்றி, அந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.

இந்தோனேசியா .. 1,347 பேர் உயிரழப்பு ,,, அத்தியாவசிய பொருட்களை சூறையாடும் மக்கள்.. விடியோ


BBC : இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது.
முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளோடு தேடி வருகின்றனர்.
பாலூ மக்கள் கொள்ளையடிக்கின்றனரா?
அல்லது வாழத்தேவையானதை எடுத்துக் கொள்கிறார்களா? காணொளியை பாருங்கள்

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு இல்லை : தேவசம் ஆணையம் அறிவிப்பு!

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு இல்லை : தேவசம் போர்டு முடிவு
dailythanthi.com : திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. மகர விளக்கு பூஜையின்போது இந்த கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் சென்று அய்யப்பனை வழிபடுவது வழக்கம்.எனினும், இந்த கோவிலில் பல நூற்றாண்டுகளாக 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட காலத்தில் பெண்கள் மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

தமிழுக்கு எதுவுமே செய்யாத உ வே.சாமிநாதைய்யர் ஒரு தமிழ் தாத்தாவா? பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அதிரடி!


Krishnavel T S : அய்யா சுபவீ அவர்களால் வெளியிடப்பட்ட எனது 3ஆவது
நூலான 'உ.வே.சா தமிழ் தாத்தாவா? " நூலின் முன்னுரையில் இருந்து.......
இன்டியானா ஜோன்ஸ், என்னும் வரலாறு சம்பந்தப்பட்ட சாகச திரில்லர் வகையை சார்ந்த, ஆங்கில திரைப்படத்தை பலர் பார்த்திருப்பீர்கள், அதன் முதல் பாகத்தில், முதல் காட்சிகளில், கதாநாயகனான புரபசர் ஜோன்ஸ், வகுப்பில் பாடம் எடுக்கும் போது “Archeology is about FACT, not TRUTH” என்று சொல்லுவார். அந்த வரிகளை கொண்டே இந்த நூலை நாம் தொடங்குவோம்
அதாவது “அகழ்வாய்வு வரலாறு என்பது தரவுகளுடன் கூடிய உண்மை பற்றியது, பொதுவாக உண்மை என்று கருதப்படுவது பற்றியது அல்ல” என்பது அதன் பொருள்.
அது என்ன FACT மற்றும் TRUTH என்று நீங்கள் கேட்கலாம், இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு நேர் தமிழ் சொல் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அந்த இரு சொற்களையும் ஆங்கிலத்திலேயே தொடர்கிறேன்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அன்றைய காலகட்டத்துக்கு அது TRUTH, உண்மையானது என்று தான் சொல்லவேண்டும் ஆனால் FACT என்னவென்றால் பூமி எப்போதுமே உருண்டையானது என்பது தான்.
அல்லது நமது அய்யன் வள்ளுவன் சொல்லுவது போல சொல்லவேண்டும் என்றால்,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

சீமானிடம் இருந்து மீண்ட சொத்து .. மகிழ்ச்சியில் வீட்டின் உரிமையாளர் ,, 19 ஆண்டுகள் வாடகையும் தரவில்லை .

Amirthalingam K Ariyalur சீமான் பிடியில் இருந்து மீட்கபட்ட வீடு மகிழ்ச்சியில்
உரிமையாளர்..! வழக்கறிஞர் அண்ணன் Vs Gopu அவர்களுக்கு வாழ்த்துகள், . . சீமானின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சொத்து. தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன். ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது. இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.
ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.
உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

திமுக உறுப்பினர்களும் தகுதி நீக்கம்?

திமுக உறுப்பினர்களும் தகுதி நீக்கம்?மின்னம்பலம் : “திமுகவுக்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் இன்னும் பத்து நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கு” என்று கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
முதல்வர் மீதும் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஸ்டாலின் பல ஊழல் புகார்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வழக்குத் தொடுத்து வரும் நிலையில்தான்... ஈழத்தில் திமுக காங்கிரஸ் செய்யும் துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழகம் எங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
அதில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
“சேலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் என்னை பேடி என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஒரே தொகுதியில் 9 முறை தொடர்ந்து நின்றிருக்கிறேன். உங்களைப் போல் பதவி வெறி பிடித்து அலையவில்லை. நீங்க வந்த விதம் வேறு... நான் வந்த விதம் வேறு. அப்பா பெயரைச் சொல்லி வரவில்லை. நான் கிளைச் செயலாளரில் ஆரம்பித்து, ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு என்று விசுவாசமாக இருந்து வந்துள்ளேன். அதிமுகவைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

போலியோ மருந்தில் கலப்படம்:,, விசாரணை !

போலியோ மருந்தில் கலப்படம்: விரைவில் விசாரணை!மின்னம்பலம் :போலியோ சொட்டு மருந்தில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று (அக்டோபர் 1) மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய்த் தாக்குதலைத் தடுக்கும் சொட்டு மருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதை ஒட்டி நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் உள்ள மருந்துப் புட்டிகளில் சுமார் 50,000 லிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான மருந்துகள் வரை கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ரன்வீர் ஷாவின் பண்ணை வீடுகளில் மேலும் 132 சிலைகள் மீட்பு

Anita Rathnam- Ranvir Sha
( கலைசேவை Ranvir Shah and Anita Ratnam (co-curators of The Other Festival) took turns in welcoming the audience  over the week. Victor Paulraj and his team worked day and night to ensure smooth functioning of the technical requirements. Special mention must be made of the patient and appreciative audience who graced the festival on all the days. It is no wonder that every artiste loved performing at The Other Festival!)
தொழில் அதிபரின் பண்ணை வீடுகளில் மேலும் 132 சிலைகள் மீட்பு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி தினத்தந்தி : காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகளில் இருந்து மேலும் 132 சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சோதனை முடிந்தபின் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி அளித்தார். மதுராந்தகம், < தமிழகம் முழுவதும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டு வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளும் மீட்கப்பட்டு வருகின்றன இதையொட்டி சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரது வீட்டில், கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

தக் பெஹ்ராம் .. 931 பேரை கொன்ற இந்தியன் சீரியல் கில்லர்.. உலகில் அதிகம் பேரை கொன்றவன்

Balaji Viswanath Boldsky : உலகின் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் என்றாலே
அவன் எங்கோ அமெரிக்காவின் கலிபோர்னியா அல்லது டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவனாக இருப்பான். துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்திருப்பான் என நாம் நினைப்போம். நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!! ஆனால், அவன் டெல்லி - ஜபல்பூர் வழியில் வாழ்ந்தவன், வெறும் கர்சீப்பை கொண்டு 931 உயிர்களை கொன்று குவித்தவன் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். ஓர் இந்தியன் தான் உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான, கொடூரமான சீரியல் கில்லராக இருந்துள்ளான்...
தக் பெஹ்ராம் Thug என்ற வார்த்தைக்கு பெரும்பாலானோருக்கு என்ன பொருள் என்று தெரியாது. Thug என்றால் குண்டர் அல்லது கொள்ளைக்காரன் என்று பொருள். இது ஆங்கிலே சொல்லே அல்ல, இந்தி சொல்லான தக் "Thag"ல் இருந்து மருவிய சொல்.
 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தக் பெஹ்ராம் என்ற கொள்ளையர்களின் தலைவனின் பெயரில் இருந்து தான் இந்த சொல் வந்தது என சிலர் கூறுகின்றனர்.

நடிகை தனுஸ்ரீ நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு


மும்பை: ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடுமாறு இயக்குனர் விவேக்
அக்னிஹோத்ரி தெரிவித்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2008ம் ஆண்டில் நடந்த அந்த சம்பவம் பற்றி அவர் தற்போது மீண்டும் பேசியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீதும் புகார் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, செட்டில் என்னை அனைவர் முன்பும் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆடுமாறு விவேக் கூறினார். அப்போது நடிகர்கள் இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்றார்.
நடிகர் இர்பான் கானை தான் க்ளோசப்பில் காட்டும் காட்சியை படமாக்கினார்கள். நான் அந்த ஷாட்டிலேயே வர மாட்டேன். இர்பான் எதையோ பார்த்துவிட்டு ரியாக்ட் செய்ய வேண்டும்.

ஐ நாவின் ஏற்பாட்டில் 47 புலி தலைவர்கள் ... அதை தவிர்க்கவே ராஜபக்சே ஜோர்டான் சென்றார்?

புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பாகரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களின் பட்­டி­யலை அர­சாங்­கத்­திடம் கைய­ளிப்­ப­தற்­காக ஐ.நா. அதி­கா­ரிகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திப்­ப­தற்கு எடுத்த முயற்­சியை தவிர்ப்­ப­தற்­கா­கவே இறுதி யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு சில நாட்கள் இருக்­கையில் மஹிந்த ராஜ­பக் ஷ ஜோர்­தா­னுக்கு விஜயம் செய்­த­தாக தகவல் தற்­போது வெளியா­கி­யுள்­ளது.
இறு­திக்­கட்ட யுத்­த­த்தின்­போது கடைசி இரண்டு வாரங்­களில் அப்­போ­தி­ருந்த ஜனா­தி­ப­தியோ பாது­காப்புச் செய­லா­ளரோ இரா­ணுவத் தள­ப­தியோ நாட்டில் இல்­லை­யெ­னவும் அந்த காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலிகள் கொழும்பின் மீது சென்­னைப்­ப­கு­தி­யி­லி­ருந்து வந்து விமானத் தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக வெ ளியான தக­வல்­களை அடுத்து இவர்கள் வெளிநாடு சென்­றி­ருந்­த­தா­கவும் அப்­போது தானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக செயற்­பட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க்கில் இலங்­கை­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்த கருத்துத் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஊடகம் ஒன்­றுக்கு கருத்த தெரி­விக்­கையில், யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்­தின்­போது கடைசி சில தினங்கள் தான் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு வெ ளிநாட்­டுக்கு சென்­றி­ருந்­தா­கவும் யுத்தம் முடி­வ­டைந்­தது தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 2009ஆம் மே 19ஆம் திகதி தானே அறி­வித்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

சென்னை ஏசியில் கசிந்த வாயுவால் மூவர் உயிரிழப்பு .. ஒரே குடும்பத்தை சேர்ந்தவரக்ள்

THE HINDU TAMIL : சென்னை கோயம்பேட்டில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக ஏசி இயந்திரத்திலிருந்து வெளியான வாயுவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.  தனியார் பீட்ஸா நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி கலையரசி மற்றும் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது மகன். மூவரும் இரவு உறங்கிய பிறகு திடீரென மின்சாரம் நின்றுபோனது.
இதனால் வீட்டில் உள்ள மினி ஜெனரேட்டரை ஆன் செய்துவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினர். மீண்டும் மின்சாரம் வந்தபோது ஜெனரேட்டர் அணைக்கப்பட வேண்டும். ஆனால் மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் மீண்டும் மின்சாரம் வந்ததை அவர்கள் அறியவில்லை.
இதனால் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரும் மின்சாரம் வந்தபிறகும் தொடர்ந்து நிறுத்தப்படாமல் இருந்ததால் திடீரென ஏற்பட்ட மின் அழுத்தத்தால் ஏசி இயந்திரத்திலிருந்து கார்பன் மோனாக்சைடு என்ற வாயு கசிந்துள்ளது.

எம்ஜியார் விழாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் கலைஞர் துயிலகத்தில் அஞ்சலி!

ஆலஞ்சியார் :நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா காண வந்தவர்கள்
மன்னிக்கவும் அழைத்து வரப்பட்டவர்கள் கலைஞர் ஓய்விடத்தை /நினைவிடத்தை காண பெருந்திரளாய் வந்தார்கள் ..
இதிலிருந்தே மக்கள் தலைவர் யாரென்று தெரிந்திருக்கும்,.. எம்ஜிஆரை பிடிக்கும் அவரின் ரசிகன் ஆனால் தலைவரென்றால் அது கலைஞர்தான் என்று தங்கள் செய்கையால் உணர்த்தி இருக்கிறார்கள் .. ..
தமிழகம் கண்ட மிகச்சிறந்த தலைவர் கலைஞர்
பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை
தொட்டதில் எல்லாம் சிறந்ததாய் விளங்கியவர்/ மாற்றியவர் .. தமிழகம் தொடர்ந்து அவரை புறக்கணித்தபோதும் ஒருவித மாயையில் மயங்கி சொல்லபட்ட குற்றசாட்டில் உண்மை இருக்குமோ என நினைத்து தோல்வியை தந்தபோதும் மக்களுக்காக உழைத்தவர்.. ஈழத்து போராளிகளின் பெரும்பிழையால் வரலாற்றில் கழிவுகள் அறியணை ஏற வழிவகுத்த போதும் .. மாய எண்ணை காட்டி 2ஜி என்று ஊர் பேசிய போதும் #அறம்வெல்லும் என்று சொல்ல முடிந்ததே அந்த அரசியல் நேர்மை யாரிடத்திலும் காண முடியாதது .. கடைகோடி மக்களின் வாழ்விற்காக தொடர்ந்து சிந்தித்தும் செயல்பட்டுவந்த மாமனிதர் கலைஞர்