Chinniah Kasi :
நாய் செத்ததற்கெல்லாம் பிரதமர் பதில் கூற வேண்டுமா?கவுரி லங்கேஷை இழிவுபடுத்திய ஸ்ரீராம் சேனா முத்தலீக்
(கொலைக் கும்பலின் தலைவனே இவன்தானே?)
பெங்களூரு, ஜூன் 18 -
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி, பிரதமர் மோடி இப் போது வரை ஏன் பேச மறுக்கிறார்? என்று எல்லோரும் கேட்பதாகவும், ‘நாய் செத்ததற்கெல்லாமா பிரதமர் பதில் சொல்வார்’ என்று ஸ்ரீராம் சேனாதலைவர் பிரமோத் முத்தாலிக் திமிராகபேசியுள்ளார்.‘கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை; கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு முகநூலில்பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். இதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்துப் பேசியுள்ளார்.


























