செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி காங்கிரஸ் ...

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக வெற்றி!மின்னம்பலம் :குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில், குஜராத் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

முன்னாள் புலிகள் இலங்கை ராணுவத்தில்

தினமலர் :கொழும்பு: அண்டை நாடான இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, 11 பேர் உட்பட, 50 பேர், ராணுவத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர், 2009ல், முடிவுக்கு வந்தது. அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, 11 ஆயிரம் பேர், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான தொழில் பயிற்சிகளுடன், ஆங்கில மொழி பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் விடுதலைப் புலிகளில், 11 பேர் உட்பட, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, 50 பேர், இலங்கை ராணுவத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர், சுமித் அட்டபட்டு கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும், ராணுவத்தின், விவசாய பணியில் ஈடுபடுத்தப்படுவர். ராணுவ சீருடை அணியாத இவர்களுக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கப்படும். வரும் காலத்தில், அதிகளவில் தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

BBC : கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?" காலிஸ்தான் ஆதரவு என சந்தேகம்? ஜஸ்டின் ற்றுடோ இந்திய வருகை ..


Canadian Prime Minister Justin Trudeau
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை.

தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

அனைத்து கட்சி கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு ..

tamiloneindia :எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது.அந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள்வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரை 14.75 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. அந்த 14.75 டிஎம்சி நீரும் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த விவசாயிகள், தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டிவந்தனர்.மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அடுத்த 6 வாரங்களில் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கமல் + ரஜினி வருகையை கோபாலபுரம் விரும்பவில்லையாம் ... ரஜினி கமலிடம் கிசு கிசு ..

tamiloneindia :சென்னை: ஆன்மீக
அரசியலில் குதித்த போது தாம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததை அவரது குடும்பத்தினர் எவருமே விரும்பவில்லை என கமல்ஹாசனிடம் குமுறியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமது மதுரை அரசியல் கூட்டத்துக்கு வருமாறு ரஜினிகாந்தை கமல்ஹாசன் அழைத்தார். 
கமல்ஹாசனிடம் திமுக தலைவர் கருணாநிதியை இன்னமும் நீங்க சந்திக்கவில்லைதானே என ரஜினி கேட்டிருக்கிறார். 
இதற்கு பதிலளித்த கமல், சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன் என்றார்.  அப்போது, தாம் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அவரிடம் வாழ்த்து பெறத்தான் விரும்பினேன். ஆனால் கோபாலபுரம் இல்லத்தில் யாருக்குமே நான் அவரை சந்திப்பது பிடிக்கவில்லை.. நீங்கள் கவனமாக செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். 
 ரஜினிகாந்தின் இந்த அறிவுரைப்படிதான் கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மிக கவனமாகவே கமல் பேசினாராம். திராவிடம் என் கொள்கையில் இருக்கும் என்று கூறியதும் யாரையும் கலைக்க நான் அரசியலுக்கு வரவில்லை என பம்மியதும் ரஜினி கொடுத்த வார்னிங் அடிப்படையில்தானாம்.

17 வங்கிகளில் கூடுதலாக ரூ 3000 கோடியையும் ஏப்பம் விட்ட நீரவ் மோடி நாடு முழுக்க போலி நிறுனங்கள்

tamiloneindia :டெல்லி: பஞ்சாப் பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடிசர்வதேச வங்கிக் கிளைகளில் கடனீட்டு பத்திரங்களின் மூலம் ரூ 11,400 கோடி கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதை புதிதாக பொறுப்பேற்ற வங்கி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார்.
நேஷனல் வங்கி மட்டுமல்லாது 17 வங்கிகளில் கூடுதலாக ரூ.3000 கோடி நிதியை நீரவ் மோடியின் நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீரவ் மோடி தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டார். 3 கடைகளில் விசாரணை இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னையில் நீரவ் மோடிக்கு தொடர்புடைய 3 பிரபல நகைக் கடைகளில் விசாரணை நடத்தினர்.

ரூ.800 கோடியோடு விக்ரம் கோதாரி தப்பி ஓடிவிட்டார் ...ரோட்டோமாக்ஸ் கம்பனி

அடுத்த ஆளும் எஸ்கேப்… ரூ.800 கோடி லோன் வாங்கிவிட்டு வெளிநாடு பறந்த விக்ரம் கோதாரி.. யார் இவர்? டெல்லி: ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார். இவர் தற்போது சுவிட்சர்லாந்து பறந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போதுதான் நீரவ் மோடி 11,360 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் சுவிட்சர்லாந்து சென்று உல்லாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த நபரும் வெளிநாடு சென்று இருப்பது அதிர்ச்சி அளிக்க வைக்கிறது.
நீரவ் மோடி சம்பவம் வெளியே வந்த அதே நாளில்தான் இவரும் உஷாராகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. லோன் ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளார்.
தற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை.

BBC : தஷ்வந்த்திற்கு தூக்கு... சிறுமி ஹாசினி கொலை வழக்கு


சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த்திற்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.e>தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைந்து, 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையிலிருந்தே நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. காலை 11 மணியளவில் தீர்ப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. தீர்ப்பு வெளியாவதற்கு சிறிது நேரம் முன்பாக நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன. அதற்குப் பிறகு, பிற்பகல் மூன்று மணியளவில் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் கூறினார். இதையடுத்து நீதிபதியிடம் பேசிய தஷ்வந்த் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமெனக் கோரினார்.

கே.பாலச்சந்தரின் வீடு காரியாலயம் ஏலத்திற்கு வருகிறது ... வங்கி கடன்கள் பாக்கி

Balaநக்கீரன :வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாததால் இயக்குனர் பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை ஏலத்தில் விற்க வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்டவர் பாலச்சந்தர். தாதா சாகோப் பால்கே விருது பெற்ற இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்வதவர். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலச்சந்தர், கடந்த 2014ஆம் ஆண்டு உயிர்நீத்தார்.

ஜாக்கியின் சிவனை பார்க்க கபாலி ரேஞ்சுக்கு ரேட்டுகள்

வாசுகி பாஸ்கர் :
 Ganga - 50,000 rs
Yamuna - 20,000 rs
Narmada - 5000 rs
Gothavari - 1000 rs
Kaveri - 500 rs
கேக்கவே கேவலமா இருக்கும் இந்த விலைப்பட்டியல் ஜக்கி வாசுதேவின் மஹா சிவராத்திரி டான்ஸை தூரத்திலுருந்து பார்ப்பதற்கும், அருகிலிருந்து பார்பதற்குமான விலை பட்டியல்.
பெரிய மைக்கல் ஜாக்சன், அப்படியே ஆடிக்கிட்டு இருக்கும் போது தொப்பியை தூக்கி போட்டா அப்படியே ரசிகர்கள் செத்து விழுவாங்க.
இதுக்கு ஒரு price tag வேற

கடப்பாவில் அடித்து கொல்லப்பட்ட ஐந்து தமிழர்கள் .....

tamilthehindu :ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த தமிழர் கள் 7 பேரின் சடலங்களை நேற்று போலீஸார் மீட்டனர். இது தற் செயலாக நடந்த விபத்தா, அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசினார்களா எனும் கோணங்களில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் கடத்தும் கும்பல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமும் திருப்பதி, கடப்பா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் செம்மர கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது.

காணாமல் போகும் நிலையில் தமிழக மொழிகள்! கோட்டா , தொட்டா

தினமலர் : புதுடில்லி: தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன. குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை உருவாகும் என, தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, மொழியியல் துறை நிபுணர்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ளன.அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. யுனெஸ்கோவும் இதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் காணாமல் போய்விடும். இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில், 11 மொழிகளும், மணிப்பூரில், ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

bbc :கலைஞர் வீட்டில் ரஜினியும் கமலும்.. ஒரே நாளில்

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று, ஞாயிற்றுகிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். வரும் பிப்ரவரி 21 தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியிடம் மக்கள் மீதான அக்கறை, தமிழ் மற்றும் அறிவுகூர்மை போன்ற தன்மைகளை கற்றுக்கொள்ளப் போவதாக தெரிவித்த கமல் ஹாசன், அவரை சந்திப்பது முதல் முறை அல்ல என்றும் தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணியில் இணைவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ”நான் பல விதமான அரசியல் கொள்கைகளை தெரிந்துகொண்டு அவற்றில் இருந்து சிறந்தவற்றை எடுத்துக்கொள்வேன். கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்ததாக ஆட்சி அமைப்பதில் அனைவருக்கும் கனவு உள்ளது. எனது கொள்கையை அவர்கள் தெரிந்துகொண்டு கூட்டணி வைப்பது பற்றி அவர்களும் முடிவுசெய்ய வேண்டும்,” என்றார்.

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்


inioru.com : செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் >அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”
என்றார்வள்ளுவர். அறிவுசெல்வங்களில் செவியால் வரும் செல்வமே சிறந்த்து என்பது இத்ன் பொருள்.
>நல்ல இசை என்பது இலகுவாகச் செவி வழி புகுந்து விடுகிறது.மிகுந்த சிரமத்துடன் தான் நினவிலிருந்து மறைகின்றது”
என்றார் தோமஸ் பீக்சாம். மெளனம் முழுமையாக சூழ்ந்துவிட்டநிலையில் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை, கருத்துக்களை ஓரளவேனும் வெளிக்காட்டக் கூடிய ஊடகம் இசையாகும்”
என்றார் அட்டஸ் பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின் மிசை இல்லையடா……
பண்ணை இசைப்பீர்- நெங்சில்
புண்ணை ஒழிப்பீர்” என்றார் பாரதி.
“துன்பகடலை தாண்டும் போது
தோணியாவது கீதம்”… என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
“கலைகளைச் சுவைக்கும் திறன் வளர கலைகளே உதவிசெய்யும், என்பதற்கு இசையேசிறந்த உதாரணம் ஆகும்”
என்று கார்ல் மார்க்ஸ் கூறிய மேற்கோள்கள் இசையின் சிறப்பை விளக்குகின்றன.
 இப்படி இசையின் சிறப்பை நிறையவே மேற்கோள்காட்டிக்கொண்டே போகலாம். தமிழில் இயல், இசை,நாடகம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. முத்தமிழில் இசையும் நாடகமும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்ததெனவும், அதற்கென சிறந்த இலக்கண நூல்கள் இருந்ததெனவும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறியக்கூடியதாக உள்ளது.

சோழர்களின் பொலன்னறுவை சிவாலயத்தில் சிவராத்திரி... இலங்கையில் ...


தினகரன் :போரில் அழிந்து போன அநுராதபுரத்தைக் கைவிடப்பட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை தலைநகரம் ஆக்கப்பட்டது. 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிவராத்திரி விழா பொலன்னறுவை சிவன் கோயிலில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வேளையில் பொலன்னறுவை சிவன் கோயில் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வது இங்கே முக்கியம்.
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன் தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வட பகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது.

வங்கிகளில் இதுவரை 5200 பேர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.

வெப்துனியா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு வைர வியாபாரி நீரவ் மோடி தலைமறைவாகிவிட்ட நிலையில் பல வங்கிகளில் இதேபோன்ற மோசடி நடந்துள்ளது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 5200 பேர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் எஸ்பிஐ வங்கியை சேர்ந்தவர்கள். இந்த வங்கியில் மட்டும் 1538 ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 449 ஊழியர்களூம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 184 ஊழியர்களும் இதில் அடங்குவர்.<

BBC :பஞ்சாப் நேஷனல் வங்கி 10 தகவல்கள்.. ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

10 தகவல்கள் : இந்தியாவின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும் ரூ.11,300 கோடி மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு அளவும், 2017 ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் இந்த வங்கிக்கு கிடைத்த லாபத்தின் 50 மடங்குமாக இந்த தொகை இருப்பது குறிப்பிடத்தக்கது.
 சில வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தும் வகையில் நிதி மோசடி பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த வங்கி தெரிவித்திருக்கிறது. பிற வங்கிகளையும் இந்த மோசடி பரிமாற்றம் பாதிக்கலாம் என்று கவலைகள் எழுந்துள்ளதால், இந்திய வங்கி வட்டாரத்தில் இது நம்பகதன்மைக்கு இது பேரிடியாகியுள்ளது.
 1. கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன் பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக கூறப்படுகிறது.
 2.இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம் (letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சுடுஎண்ணெயில் வடை சுட்ட பாட்டி அம்பலம் ..

மதுரை அன்புமதி :வருசந் தவறாம இந்த ஃப்ராடு பாட்டி கொதிக்கும் எண்ணைக்குள் கைவிட்டு வடைசுட்டுத் தருது.
இதுக்கு நாற்பது நாட்கள் சுத்தபத்தமா விரதமாம். கடவுளின் அருளால்தான் இதைச் செய்து வருவதாகப் பேட்டி வேறு.
பாட்டி பண்றது ஃப்ராடு வேலைன்னு பகுத்தறிவாளர்கழகத்தினரும் ஆண்டு முழுக்க பிரச்சாரம் செய்து, பாட்டி எப்படி தில்லுமுல்லு பண்ணுதுங்கிறதை தெருவில் மேடைபோட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டுதான் வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு மேடையில் அன்புமதியாகிய நானேகூட கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் கைவிட்டு எடுத்திருக்கிறேன். எண்ணெய் கொதிக்கும்;ஆனால், சுடாது.
அதற்கு ஒரு மூலிகைச்சாற்றினை அந்த எண்ணெய்யில் சேர்க்கின்றனர். மூலிகைச் சாறு சேர்க்கப்பட்ட அந்த எண்ணெய்யை சட்டியில் ஊற்றி அடுப்பிலேற்றி நெருப்பு மூட்டினால், எண்ணெய் நன்கு கொதிக்கும். கையை விட்டுப் பார்த்தால் சுடாது.

பொன்.ராதாகிருஷ்ணன் : பன்னீர்செல்வம் பச்சைக் குழந்தை அல்ல!

மின்னம்பலம் : பன்னீர்செல்வம் ஒன்றும் பச்சை குழந்தை அல்ல, அவர
பழுத்த அரசியல்வாதி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேனியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், "பிரதமர் கூறியதன் பேரிலேயே எடப்பாடி அணியுடன் ஒன்றாக இணைந்தேன். இணைந்தாலும் எனக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டாம், கட்சியில் மட்டும் பொறுப்பு வகித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் பிரதமர் வற்புறுத்தியதன் பேரிலேயே துணை முதல்வராகப் பொறுப்பேற்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் சத்யராஜ் : அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது!

அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது!மின்னம்பலம் :‘அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது; அந்த நடிகர்களுக்கும் நல்லது’ என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நேற்று (பிப்ரவரி 17) சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சுப.வீரபாண்டியன், திருச்சி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சத்யராஜ், “எனக்கு உணர்வுகளால் மட்டுமே பேசத் தெரியும். புள்ளி விவரங்களால் பேசத் தெரியாது. நதியே சமூகத்திற்கு சொந்தமில்லாமல் ஆகிவிட்டது. முதலில் நதியை சமூகத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒரு இடத்தில் உற்பத்தியானால் அந்த நதி அவர்களுக்குச் சொந்தமாகிவிடுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதாக இல்லை. தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் சொல்லிக்கிறேன். தண்ணீர் நமக்கான பிரச்சினை இல்லை என்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைக்க வேண்டாம். ஒருநாளில் அது நம் தலையின் மீதுதான் விழும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எதற்காக?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எதற்காக?minnambalam :அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டு,அதற்கான ஆயத்த பணிகளையும் அடுத்த கட்ட நடவைடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.நடிகர் விஷாலும் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், நடிகர் பாக்கியராஜும் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி துவங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று(பிப்ரவரி 17) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, "அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விட்டனர் " என்று விமர்சனம் செய்தார்.

BBC :இரான் விமான விபத்து 66 பேர் உயிரிழப்பு .. மலையில் மோதியது


60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.
இஸ்ஃபஹான் மாகாணத்தில் செமிரொம் நகரத்துக்கு அருகே உள்ள சக்ரோஸ் மலைகளில் இந்த விமானம் மோதியது."அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக" அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR 72-500 விமானம் என நம்பப்படுகிறது.
விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுனர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுனர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவின் ஒண்டிமிட்டா வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு

ஆந்திராவின் ஒண்டிமிட்டா வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்புமாலைமலர் :ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளது. கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர்.< இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்வாதிகளில் 67% கிரிமினல்ஸ் பிஜேபியில் தான் இருக்காங்கனு ரிப்போர்ட்

சுவாதி திருநெல்வேலி : எதற்க்கு மோடியின் ஊழல், கறுப்புப்பண ஒழிப்பு எல்லாம் வெறும் நாடகம் என்று சொல்கிறீர்கள்?
சிம்பிள் லாஜிக்.. சின்ன குழந்தைக்கு கூட புரியும்...
4120 MLA, 790 MP.. இதுல 39% அரசியல்வாதிகள் மேல் கிரிமினல் கேஸ் இருக்கு. இப்ப இருக்கிற அரசியல்வாதிகளில் 67% கிரிமினல்ஸ் பிஜேபியில் தான் இருக்காங்கனு ரிப்போர்ட் சொல்லுது.. 4 வருஷம் ஆகப்போகுது எத்தனை கிரிமினல் அரசியல்வாதிகள் மேல் ஆக்க்ஷன் எடுத்து உள்ளே போயி இருக்காங்க சொல்லுங்க!! மோடியை எதிர்க்கும் ஒரு சில "கிரிமினல்ஸ்" வேணும்னா உள்ள போயி இருப்பாங்க..
டாப் 50 கார்ப்பரேட் வாராகடன் மட்டும் 6.7 லட்சம் கோடி (மொத்த வாரகடன் 8.9 லட்சம் கோடி). 2014ல் இருந்து வருமானவரி ஒழுங்கா கட்டாமல் டாப் 100 கார்ப்பரேட் ஏமாற்றிய பணம் மட்டும் 1.83 லட்சம் கோடி. இவங்களில் எவ்வளவு பேரு இப்ப சிறையில் இருக்காங்க?? சொல்லுங்க..
MLA, MP, பினாமி, தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், டைரக்டர், தயாரிப்பாளர்கள், விளையாட்டு துறையில் முக்கியான புள்ளிகள், அரசாங்க துறையில் மேல்மட்ட மக்கள்.. அனைத்து முக்கியமான தனியார் துறையின் மேல்மட்ட மக்கள்.. இவங்க தான் ஊழல், கருப்பு பணம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை... இவர்களில் எவ்வளவு பேரு மோடிஜி "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" ஆக்சன்ல இப்ப ஜெயிலில் இருக்கிறார்கள்?? இவங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுத்துட்டு.. இவங்க மேலே எந்த ஒரு ஆக்சன் எடுக்காம.. நீங்க எந்த ___ புடுங்க முடியாது...

அனிதா குப்புசாமி : சுதா ரகுநாதன் போன்றவர்கள் கருப்பு தமிழன் பாடக்கூடாது ... வெள்ளை தோல் பார்ப்பனர்கள்தான் பாடவேண்டும் என்று....?